![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
இரண்டு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கன்னிவாடிக்கு வந்தவர் நேற்று வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டிலேயே வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தள்ளார்.
![Dindigul: Dindugal Constable hanged himself due to debt problem know full details Dindigul:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/58c212049b7dc34ef07d8665a233cdb91718286123148739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம். இவரது மகன் வினோத்குமார்(32). இவர் சென்னையில் ஏ.ஆர்.போலீஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரித்திக் சிவா என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது.
போலீஸ் தற்கொலை:
இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கன்னிவாடிக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டிலேயே வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தள்ளார். இதை பார்த்த உறவினர் ஒருவரால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை செய்ததில் இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும், மேலும் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனை இருந்ததாகவும் இதனால் மன உலைச்சலில் இருந்த கான்ஸ்டபிள் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)