மேலும் அறிய

திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே  பெரியூர்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே  பெரியூர்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இக் கோயில் திருவிழா கடந்த 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்புகட்டி விரதம் தொடங்கியது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் 11ஆம் தேதி ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தையில் ராஜ்குமார் என்பவர்  தலைமையில் திருவிழா நடத்தப்பட்டது.

திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள்  தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு வந்த முக்கியஸ்தர்களுக்கு நாயக்கர் இனபெண்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வைஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய விழாவான நேற்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு ராஜகம்பளத்தார் முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு பல்வேறு மந்தைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகள் கோவில் முன்பாக அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. 


திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து சாமி மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து சாமி மாடுகள் மந்தைநாயக்கர் ஸ்ரீ மந்தையம்மன் கோவிலுக்கு ஓடிவந்து தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்டும் நிகழ்வு நடந்தது. மூன்று முறை மாடுகள் மாலையை தாண்டியது. ஒவ்வொரு சாமி மாட்டுக்கும் எலுமிச்சை கனியை   தெய்வகனியாக பரிசாக வழங்கப்பட்டது.


திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

கரடுமுரடான பாதையில் சாமி மாடுகளுடன் ராஜகம்பளத்து நாயக்கர் இன ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், இரண்டாவது,  மூன்றாவாதாக வந்த சாமி மாடுகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. திருவிழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்களின்  தேர்தல் முடிவு தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி , நிலக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியகுழு கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி பெற்றது.

அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

ABP Nadu Exclusive: ஓபிஎஸ்., கோட்டையில் நீக்கப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்... தேனியை கூறு போட்டது அம்பலம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget