மேலும் அறிய

Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

சென்னையில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் விருது வழங்கும் விழாவில் பெரியார் விருது நடப்பாண்டு இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அவர் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ இந்த விருதை பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னை மாதிரி கிராமத்தில் இருந்து சாதிய இறுக்கம் நிறைந்த ஊரில் இருந்து சினிமா, எழுத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவை எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துக்கள். அதுதான் என்னுடைய சினிமாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் தென் தமிழ்நாடான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றியெரிந்த காலத்தில் வளர்ந்த பையன் நான். எங்கள் வீட்டில் என்னுடைய சித்தப்பா கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அப்போது எனக்கு அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பரீட்சையமான முகங்கள். அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார். 

சட்டக் கல்லூரியில் படிக்கும்போது பெரியாரை தெரிந்துக் கொள்ளும் சூழல் அமையவில்லை. ஆனால் எனக்குள் பெரியாரை கொண்டு சேர்த்தது என்னுடைய மனைவி தான். நான் இப்போது பெரியாரை பற்றி படித்து விட்டு ஏதாவது பேசுகிறேன் என வைத்துக் கொண்டால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச்சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். 

நன்றாக பேச கத்துக்க முடியும். மிகப்பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து விடும். அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என கேட்டால், நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போது தான் நாம் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீற வேண்டும் என்பது, அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல. ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். 

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது. அவரை புரிந்து கொண்டு அவர் எந்த மாதிரியாக சமூகம், கருத்து சுதந்திரத்தை விதைக்க ஆசைப்பட்டாரோ அதை செய்ய வேண்டும். நாம் எதை மக்களிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம். வன்மம், பிரிவினை, வெறுப்புணர்வை கொடுப்பது சாதனை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாரி செல்வராஜ் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

R Parthiban: தாய்மொழி தெலுங்கு தான்.. பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது..பார்த்திபன் ஆவேசம்!
R Parthiban: தாய்மொழி தெலுங்கு தான்.. பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது..பார்த்திபன் ஆவேசம்!
K.Bhagyaraj: பாக்யராஜ் அரசியலுக்கு வருவதை தடுத்த எம்ஜிஆர்.. காரணம் என்ன தெரியுமா?
K.Bhagyaraj: பாக்யராஜ் அரசியலுக்கு வருவதை தடுத்த எம்ஜிஆர்.. காரணம் என்ன தெரியுமா?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Mahindra BE6 Formula E Edition: அஜித்திற்கு பரிசாக வந்த 23 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 Formula E Edition...சிறப்பம்சங்கள் இதோ!
Mahindra BE6 Formula E Edition: அஜித்திற்கு பரிசாக வந்த 23 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 Formula E Edition...சிறப்பம்சங்கள் இதோ!
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Trump Stunned by Iran: “ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
“ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Embed widget