மேலும் அறிய

Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

சென்னையில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் விருது வழங்கும் விழாவில் பெரியார் விருது நடப்பாண்டு இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அவர் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ இந்த விருதை பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னை மாதிரி கிராமத்தில் இருந்து சாதிய இறுக்கம் நிறைந்த ஊரில் இருந்து சினிமா, எழுத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவை எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துக்கள். அதுதான் என்னுடைய சினிமாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் தென் தமிழ்நாடான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றியெரிந்த காலத்தில் வளர்ந்த பையன் நான். எங்கள் வீட்டில் என்னுடைய சித்தப்பா கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அப்போது எனக்கு அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பரீட்சையமான முகங்கள். அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார். 

சட்டக் கல்லூரியில் படிக்கும்போது பெரியாரை தெரிந்துக் கொள்ளும் சூழல் அமையவில்லை. ஆனால் எனக்குள் பெரியாரை கொண்டு சேர்த்தது என்னுடைய மனைவி தான். நான் இப்போது பெரியாரை பற்றி படித்து விட்டு ஏதாவது பேசுகிறேன் என வைத்துக் கொண்டால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச்சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். 

நன்றாக பேச கத்துக்க முடியும். மிகப்பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து விடும். அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என கேட்டால், நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போது தான் நாம் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீற வேண்டும் என்பது, அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல. ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். 

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது. அவரை புரிந்து கொண்டு அவர் எந்த மாதிரியாக சமூகம், கருத்து சுதந்திரத்தை விதைக்க ஆசைப்பட்டாரோ அதை செய்ய வேண்டும். நாம் எதை மக்களிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம். வன்மம், பிரிவினை, வெறுப்புணர்வை கொடுப்பது சாதனை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாரி செல்வராஜ் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget