மேலும் அறிய

கடைக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

பட்டப்பகலில் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

திண்டுக்கல் அருகே நிலக்கோட்டையில் இரும்பு கடைக்குள் புகுந்து  ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர் நிலக்கோட்டையில் தங்கி இருந்து, ஒரு இரும்பு கடையில் வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் வழக்கம் போல் இரும்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

Israel Hamas War: இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா.. ஆப்ரேஷன் அஜய் திட்டம் அறிவிப்பு..

கடைக்குள் புகுந்து  ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல்  நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லில் கடந்த 2020-ம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அழகர் 6-வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் சுள்ளான் ரமேஷின் நண்பர்கள், அழகரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

Mahalaya Amavasya: மகாளய அமாவாசை; சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

இதை அறிந்த அழகர் குடும்பத்துடன் நிலக்கோட்டைக்கு வந்துவிட்டார். நிலக்கோட்டையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட கும்பல், நிலக்கோட்டைக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் பட்டப்பகலில் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடைக்குள் புகுந்து  ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல்  நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

ABP Southern Rising Summit 2023 LIVE: ஆளுநர்கள் பாலமாக இருப்பவர்கள் : விபத்துகளை தடுப்பவர்கள், அவர்களை தவறாக புரிந்துகொள்ள தேவையில்லை - ஆளுநர் தமிழிசை

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்தநிலையில் அழகர் கொலை வழக்கு தொடர்பாக பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23), சர்புதீன் (19), கார்த்தி (20), மாணிக்கம் (20), பார்த்தசாரதி (20) ஆகியோர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நிலக்கோட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Embed widget