மேலும் அறிய

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  வரை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 160க்கு மேல் அதிகரித்துள்ளது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களில் முந்தைய வாரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் மே 12 முதல் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் கேரள மாநிலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் பலி எண்ணிக்கையுடன் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து இருவருக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் 14 வயது சிறுவன் ஒருவர் நெஃப்ரோடிக் நோய்க்குறி காரணமாக சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த 54 வயது நபர் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் கோவிட்-19 உடன் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் அதிக ஆபத்தை உணர்த்தியுள்ளன. இதனிடையே புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமைய தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிதுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Embed widget