மேலும் அறிய

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  வரை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 160க்கு மேல் அதிகரித்துள்ளது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களில் முந்தைய வாரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் மே 12 முதல் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் கேரள மாநிலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் பலி எண்ணிக்கையுடன் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து இருவருக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் 14 வயது சிறுவன் ஒருவர் நெஃப்ரோடிக் நோய்க்குறி காரணமாக சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த 54 வயது நபர் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் கோவிட்-19 உடன் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் அதிக ஆபத்தை உணர்த்தியுள்ளன. இதனிடையே புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமைய தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிதுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget