மேலும் அறிய

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  வரை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 160க்கு மேல் அதிகரித்துள்ளது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களில் முந்தைய வாரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் மே 12 முதல் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் கேரள மாநிலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் பலி எண்ணிக்கையுடன் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து இருவருக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் 14 வயது சிறுவன் ஒருவர் நெஃப்ரோடிக் நோய்க்குறி காரணமாக சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த 54 வயது நபர் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் கோவிட்-19 உடன் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் அதிக ஆபத்தை உணர்த்தியுள்ளன. இதனிடையே புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமைய தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிதுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget