மேலும் அறிய

ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்

தேனி மாவட்டத்தில் 150 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா போட்ட விவகாரத்தில் RDO கையெப்பத்தை போலியாக பயன்படுத்தியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றனர். இதில் தொடர்புடைய 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையர்கள், தலைமை நில அளவை உதவி ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 7 பேர் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலம் மீட்கப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது.


ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்

இதேபோல், தாமரைக்குளம் பகுதியில் இதே அதிகாரிகள் துணையுடன் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை 42 பேர் அபகரித்து பட்டா பெற்றது தெரியவந்தது. அந்த பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த வகையில் பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மொத்தம் 150.65 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், RDO அலுவலகத்தில் ‘A' பதிவேட்டை இணைய வழியில் திருத்தம் செய்து நில ஆவணங்கள் மாற்றப்பட்டதும், அதில் RDOவின் கையொப்பம் டிஜிட்டல் முறையில் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.


ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்

இதனால் இந்த நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பணியாற்றிய RDO அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அந்த புகார் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் மீதும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்

இந்நிலையில் நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பெரியகுளம் RDOவாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி ஆகிய இருவரும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், அவர்கள் பெரியகுளம் RDOவாக பணியாற்றியபோது அவர்களின் டிஜிட்டல் கையொப்பத்தை யாரோ தவறாக பயன்படுத்தியும், இணையதளத்தில் RDOவுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தியும் ஆவணங்களில் திருத்தம் செய்து மோசடி செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்

இந்த புகார்கள் குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் மேலும் சில அலுவலர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
Embed widget