மேலும் அறிய

கொரோனா வார்டில் சேவை செய்யும் தூத்துக்குடி மாணவர்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மாணவர்கள் தன்னார்வலர்களாக சேவை செய்து வருகின்றனர். அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவிட அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களது சேவை மனப்பான்மையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர், அவர்கள் கொரோனா வார்டில் உதவிகள் செய்திட அனுமதி அளித்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனை டீன் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பதை கூறினார். மேலும், எவ்வாறு விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் கொரோனா வார்டில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கும், கொரோனா தடுப்பு பணியிலும் 31 மாணவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.


கொரோனா வார்டில் சேவை செய்யும் தூத்துக்குடி மாணவர்கள்

இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் விவரங்களை கணினியில் பதிவு செய்வது, கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களின் விவரங்களை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தல், பரிசோதனை முடிவுகளை பதிவேற்றம் செய்தல், மருத்துவமனையில் உள்ள கொரோனா உதவி மையத்தில் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொரோனா நோயாளிகளின் நிலவரங்களை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளை இந்த மாணவர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : ‛நான் உன்னை விரும்பல... அழகா இருக்கேன்னு நெனைக்கல...’ ஆனாலும் 51வது வயதில் மாதவன்!

இதுமட்டுமின்றி, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்குதல், நோயாளிகளின் நிலையை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, கொரோனா படுக்கை விவரங்களை சேகரிப்பது, அதை அட்மிஷன் பிரிவுக்கு தெரிவிப்பது போன்ற தகவல்கள் தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


கொரோனா வார்டில் சேவை செய்யும் தூத்துக்குடி மாணவர்கள்

முழு கவச உடை அணிந்து பணியாற்றும் இந்த கல்லூரி மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்ட் எனவும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட் எனவும் பணியாற்றி வருகின்றனர். முறையான கொரோனா பரிசோதனை செய்தபிறகே இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்கள், வீடுகளுக்கு சென்ற பிறகு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்தம் 38 மாணவர்கள் இந்த தன்னார்வ தொண்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். உயிர் பயத்தில் பலரும் ஒதுங்கி வரும் இப்பணியை துணிந்து, சேவை மனப்பான்மையுடன் செய்து வரும் இந்த மாணவர்களின் சேவை பாராட்டுக்கு உரியதே!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget