மேலும் அறிய

lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’

ஆசிரியருடன் முன்னாள் மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு ஆற்றும் இந்த சேவை பலரின் பாரட்டைப் பெற்றுள்ளது,

கொரோனாவின் கொடிய முகம் உலகம் முழுதும் படர்ந்து, சற்றும் வீரியத்தை குறைத்துக் கொள்ளாமல் விஷத்தை கக்குகிறது. உலக நாடுகளே உறைந்து கொரோனாவுக்கு எதிரான பணிகளை செய்துவருகின்றனர். இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போர்களத்தில் உள்ளது. தமிழகத்திலும் கோர தாண்டவம் பலமாக உள்ளது.
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
இமேஜ் - மூலிகை வழங்கும் மாணவர்

 

சென்னையில் முன்பைவிட தற்போது குறைவான பாதிப்பு இருந்தாலும் கோவை, மதுரை என பல்வேறு இடங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இப்படியான சூழலிலும் பல இடங்களில் மனிதே நேயமும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனது முன்னாள் மாணவர்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக சமூக பணிகளை செய்வது பலரது பாரட்டுகளை பெற்றுள்ளது. 
 

lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
  இது குறித்து கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சி.செல்லப்பாண்டியன் நம்மிடம்பேசும் போது, ‛‛ கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியான இந்த, சூழலில் தன்னார்வலராக பலர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நானும் என் மாணவர்களுடம் சமூகத்தில் உதவி செய்யவேண்டும் என முடிவெடுத்தோம்.  கல்லூரியில் என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு இந்த பேரிடர் காலத்தில் தங்களால் இயன்ற சமூக சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என விரும்பினர். எனவே அவர்களின் கூட்டு முயற்சியால் 'என் மாணவர்கள்' -  என்ற அமைப்பை துவங்கி எங்களால் இயன்ற சமூக சேவையை செய்து வருகிறோம். இந்த அமைப்பில் என்னிடம் படித்த மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் இணைந்து சமூக பணியாற்றி வருகின்றனர். கல்லூரி படிப்பு முடிந்த பின் சமூக பணியில் மீண்டும் எனது மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்றார்.
 
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
முன்னாள் மாணவன் சரவணகுமார் கூறுகையில், " பேரிடர் காலத்தில் இளைஞர்களின் உதவி மிகவும் முக்கியமானது. நோய் தொற்று பரவும் இந்த சூழலில் பலருக்கும் உதவி தேவைபடுகிறது. ஊரடங்கு நேரம் என்பதால் கூடுதல் சவால் இருக்கும். ஆங்காங்கே மனித கடவுள்கள் உதவி செய்துவருகின்றனர். 
 
முன்னாள் மாணவர்கள் உதவி
காவல்துறையினருக்கு முககவசம்
 
இதனை பின்பற்றி நாமும் களப்பணி செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் எங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் இருந்தது. கல்லூரி காலங்களில்  எங்கள் ஆசிரியர் செல்லப்பாண்டி கொடுத்த பயிற்சி தற்போது நினைவில் வந்தது. இதனால் அவருடன் இணைந்து பணி செய்ய முடிவெடுத்த அவரையும் அழைத்தோம். எந்த மாற்றுக் கருத்தும் சொல்லாமல் குழுவாக இணைத்தார்.
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
 
அவரிடம் பல்வேறு கல்லூரிகளில் படித்த மாணவர்களை சேர்த்து எங்களுடன் பணி செய்ய வைத்துள்ளார். ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தனிமைபடுத்திக் கொள்ளாமல் அவரும் எங்களுடன் பணி செய்துவருகிறார். தற்போது முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக பணி செய்கிறோம். முன்களப்பணியாளர்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை ஏற்பாடு செய்து வழங்கினோம். 
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
இமேஜ் - பொதுமக்களுக்கு உதவி
 
அதே போல் பொதுமக்கள் கேட்டுகும் துளசி, நொச்சி இலை, தூதுவளை என மூலிகை மருந்துகளை வழங்குகிறோம். தேவைப்படும் இடங்களுக்கு உணவுகளை கொண்டு சேர்க்கிறோம். அசாதாரண சூழலில் எங்களால் என்ன உதவிகள் முடியுமோ அதை அனைத்தையும் செய்கிறோம். அடுத்தகட்டமாக மதுரை, இராமநாதபுரம் பகுதியிலும் மாணவர்கள் செயல்பட உள்ளனர். இதன் மூலம் நம்மாளும் சமூகத்திற்கு உதவ முடிகிறது என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது. இது போன்ற களப்பணிகள் பிற்காலத்தில் நாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் பயன்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது" என உற்சாகமாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்... குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்.. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
மதுரைக்கு புதிய போலீஸ் கமிஷனர்... யார் இந்த S. ராஜேந்திரன் - திட்டங்கள் என்ன முழு விவரம் !
மதுரைக்கு புதிய போலீஸ் கமிஷனர்... யார் இந்த S. ராஜேந்திரன் - திட்டங்கள் என்ன முழு விவரம் !
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
இடைத்தரகர்கள் தலையீடு: நெல் கொள்முதல் வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி!
இடைத்தரகர்கள் தலையீடு: நெல் கொள்முதல் வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget