மேலும் அறிய

lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’

ஆசிரியருடன் முன்னாள் மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு ஆற்றும் இந்த சேவை பலரின் பாரட்டைப் பெற்றுள்ளது,

கொரோனாவின் கொடிய முகம் உலகம் முழுதும் படர்ந்து, சற்றும் வீரியத்தை குறைத்துக் கொள்ளாமல் விஷத்தை கக்குகிறது. உலக நாடுகளே உறைந்து கொரோனாவுக்கு எதிரான பணிகளை செய்துவருகின்றனர். இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போர்களத்தில் உள்ளது. தமிழகத்திலும் கோர தாண்டவம் பலமாக உள்ளது.
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
இமேஜ் - மூலிகை வழங்கும் மாணவர்

 

சென்னையில் முன்பைவிட தற்போது குறைவான பாதிப்பு இருந்தாலும் கோவை, மதுரை என பல்வேறு இடங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இப்படியான சூழலிலும் பல இடங்களில் மனிதே நேயமும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனது முன்னாள் மாணவர்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக சமூக பணிகளை செய்வது பலரது பாரட்டுகளை பெற்றுள்ளது. 
 

lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
  இது குறித்து கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சி.செல்லப்பாண்டியன் நம்மிடம்பேசும் போது, ‛‛ கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியான இந்த, சூழலில் தன்னார்வலராக பலர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நானும் என் மாணவர்களுடம் சமூகத்தில் உதவி செய்யவேண்டும் என முடிவெடுத்தோம்.  கல்லூரியில் என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு இந்த பேரிடர் காலத்தில் தங்களால் இயன்ற சமூக சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என விரும்பினர். எனவே அவர்களின் கூட்டு முயற்சியால் 'என் மாணவர்கள்' -  என்ற அமைப்பை துவங்கி எங்களால் இயன்ற சமூக சேவையை செய்து வருகிறோம். இந்த அமைப்பில் என்னிடம் படித்த மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் இணைந்து சமூக பணியாற்றி வருகின்றனர். கல்லூரி படிப்பு முடிந்த பின் சமூக பணியில் மீண்டும் எனது மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்றார்.
 
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
முன்னாள் மாணவன் சரவணகுமார் கூறுகையில், " பேரிடர் காலத்தில் இளைஞர்களின் உதவி மிகவும் முக்கியமானது. நோய் தொற்று பரவும் இந்த சூழலில் பலருக்கும் உதவி தேவைபடுகிறது. ஊரடங்கு நேரம் என்பதால் கூடுதல் சவால் இருக்கும். ஆங்காங்கே மனித கடவுள்கள் உதவி செய்துவருகின்றனர். 
 
முன்னாள் மாணவர்கள் உதவி
காவல்துறையினருக்கு முககவசம்
 
இதனை பின்பற்றி நாமும் களப்பணி செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் எங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் இருந்தது. கல்லூரி காலங்களில்  எங்கள் ஆசிரியர் செல்லப்பாண்டி கொடுத்த பயிற்சி தற்போது நினைவில் வந்தது. இதனால் அவருடன் இணைந்து பணி செய்ய முடிவெடுத்த அவரையும் அழைத்தோம். எந்த மாற்றுக் கருத்தும் சொல்லாமல் குழுவாக இணைத்தார்.
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
 
 
அவரிடம் பல்வேறு கல்லூரிகளில் படித்த மாணவர்களை சேர்த்து எங்களுடன் பணி செய்ய வைத்துள்ளார். ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தனிமைபடுத்திக் கொள்ளாமல் அவரும் எங்களுடன் பணி செய்துவருகிறார். தற்போது முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக பணி செய்கிறோம். முன்களப்பணியாளர்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை ஏற்பாடு செய்து வழங்கினோம். 
 
lock down story : உதவிக்கு அழைக்கும் மக்கள்; ஓடோடி உதவும் ‛என் மாணவர்கள்’
இமேஜ் - பொதுமக்களுக்கு உதவி
 
அதே போல் பொதுமக்கள் கேட்டுகும் துளசி, நொச்சி இலை, தூதுவளை என மூலிகை மருந்துகளை வழங்குகிறோம். தேவைப்படும் இடங்களுக்கு உணவுகளை கொண்டு சேர்க்கிறோம். அசாதாரண சூழலில் எங்களால் என்ன உதவிகள் முடியுமோ அதை அனைத்தையும் செய்கிறோம். அடுத்தகட்டமாக மதுரை, இராமநாதபுரம் பகுதியிலும் மாணவர்கள் செயல்பட உள்ளனர். இதன் மூலம் நம்மாளும் சமூகத்திற்கு உதவ முடிகிறது என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது. இது போன்ற களப்பணிகள் பிற்காலத்தில் நாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் பயன்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது" என உற்சாகமாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget