மேலும் அறிய

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

’’மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை மாவட்டத்தில் நறுமணப்பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது’’

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் 77 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி செலவில் நறுமணப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடந்து நடந்து வந்தன. மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இப்பூங்கா அமைவதால் விவாசாயிகள், தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பயனடையக் கூடும் என கூறப்பட்டது. மேலும் இஞ்சி, ஏலம், சுக்கு, மல்லி, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட பொருட்களை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை இந்த நறுமணப்பூங்கா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
நறுமணப்பூங்காவிற்காகன்கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. நறுமணப்பூங்கா திறக்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2500 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் அச்சானி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
அதில், "சிவகங்கை நறுமண பூங்கா முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஊரக நகரமைப்பு துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை சிவகங்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நறுமணப் பூங்கா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமையும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு சிவகங்கையில் கட்டப்பட்டுள்ள நறுமண பூங்காவை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget