மேலும் அறிய

செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்

செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தனியார் ரிசார்ட்டுகளில் வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.
 
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
 
இதையடுத்து நீதிபதிகள், 
 
* இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. 
 
* 2 நாட்களுக்காக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயமுத்தூர், ஊட்டி ஆகிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 
 
* இக்குழு ஆய்வில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் 
 
மேலும் இக்குழு செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget