மேலும் அறிய

உசிலம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர கோரி வழக்கு- மதுரை ஆட்சியர் பதில்தர உத்தரவு

’’உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருவதை ஜோதிமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த தனி நபர் தடைகளை ஏற்படுத்தி நீர் வருவதை தடுத்து வருவதாக புகார்’’

மதுரை மாவட்டம், கோவிலாங்குளம் சந்திரன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அதில், "மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு பெரியாறு வைகை ஆறு திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் நீர் நிரப்பட்டு வந்தது.  இதன் மூலம் உசிலம்பட்டியிலுள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக,    உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருவதை ஜோதிமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த தனி நபர் தடைகளை ஏற்படுத்தி நீர் வருவதை தடுத்து வருகிறார்.  
 
எனவே, பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வரும் போது தனி நபர் ஏற்படுத்திய தடையை அகற்றி உசிலம்பட்டியிலுள்ள கொடிமங்கலம் கண்மாய், ஜோதிமாணிக்கம் கண்மாய், கோவிலாங்குளம் பெரியகண்மாய், ஆண்டிகுளம் கண்மாய், வளையன்குளம் கண்மாய், நவநீதன்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வருவதை உறுதி செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 12 ம் தேதி ஒத்தி வைத்தனர்.
 

 
கோவில்பட்டி பொது வார்டாக மாற்ற கோரிய வழக்கு - அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவு
 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த முத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரம் வார்டு 5-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்கள் 1,300 பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்கள் 700 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக சங்கரலிங்கபுரம் வார்டு-5 தனித் தொகுதியாக இருந்து வருகிறது. சங்கரலிங்கபுரம் வார்டு-5ல், 18 தெருக்கள் உள்ளது.
 
2019ஆம் ஆண்டு நகராட்சி மற்றும் நீர் வழங்கல் துறையின் சார்பாக வெளியிட்ட அரசாணையில் வார்டு-5 பொது வார்டாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசியல் அழுத்தத்தின் காரணமாக வார்டு வரையறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சங்கரலிங்கபுரம் வார்டு 5ல் உள்ள தெருக்களை மற்ற வார்டுகளுடன் இணைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சங்கரலிங்கபுரம் வார்டு 5யை பொது வார்டு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சங்கரலிங்கபுரம் வார்டு-5ல் உள்ள 18 தெருகளில் 3 தெருக்கள் வார்டு 3ல் இணைக்கப்பட்டு பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 தெருக்கள் வார்டு-4ல் இணைக்கப்பட்டு தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து நீதிபதிகள், சங்கரலிங்கபுரம் வார்டு 5 எவ்வாறு வார்டுகள் 3 மற்றும் 4-ல் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் & நீர் வழங்கல் துறை தலைமை செயலர், தமிழ்நாடு வார்டு வரையறை ஆணையர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்க அங்கி ஊர்வலம் எப்போது? மண்டல பூஜை குறித்த முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்க அங்கி ஊர்வலம் எப்போது? மண்டல பூஜை குறித்த முக்கிய அறிவிப்பு!
Embed widget