மேலும் அறிய

உசிலம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர கோரி வழக்கு- மதுரை ஆட்சியர் பதில்தர உத்தரவு

’’உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருவதை ஜோதிமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த தனி நபர் தடைகளை ஏற்படுத்தி நீர் வருவதை தடுத்து வருவதாக புகார்’’

மதுரை மாவட்டம், கோவிலாங்குளம் சந்திரன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அதில், "மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு பெரியாறு வைகை ஆறு திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் நீர் நிரப்பட்டு வந்தது.  இதன் மூலம் உசிலம்பட்டியிலுள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக,    உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருவதை ஜோதிமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த தனி நபர் தடைகளை ஏற்படுத்தி நீர் வருவதை தடுத்து வருகிறார்.  
 
எனவே, பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வரும் போது தனி நபர் ஏற்படுத்திய தடையை அகற்றி உசிலம்பட்டியிலுள்ள கொடிமங்கலம் கண்மாய், ஜோதிமாணிக்கம் கண்மாய், கோவிலாங்குளம் பெரியகண்மாய், ஆண்டிகுளம் கண்மாய், வளையன்குளம் கண்மாய், நவநீதன்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வருவதை உறுதி செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 12 ம் தேதி ஒத்தி வைத்தனர்.
 

 
கோவில்பட்டி பொது வார்டாக மாற்ற கோரிய வழக்கு - அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவு
 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த முத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரம் வார்டு 5-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்கள் 1,300 பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்கள் 700 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக சங்கரலிங்கபுரம் வார்டு-5 தனித் தொகுதியாக இருந்து வருகிறது. சங்கரலிங்கபுரம் வார்டு-5ல், 18 தெருக்கள் உள்ளது.
 
2019ஆம் ஆண்டு நகராட்சி மற்றும் நீர் வழங்கல் துறையின் சார்பாக வெளியிட்ட அரசாணையில் வார்டு-5 பொது வார்டாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசியல் அழுத்தத்தின் காரணமாக வார்டு வரையறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சங்கரலிங்கபுரம் வார்டு 5ல் உள்ள தெருக்களை மற்ற வார்டுகளுடன் இணைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சங்கரலிங்கபுரம் வார்டு 5யை பொது வார்டு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சங்கரலிங்கபுரம் வார்டு-5ல் உள்ள 18 தெருகளில் 3 தெருக்கள் வார்டு 3ல் இணைக்கப்பட்டு பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 தெருக்கள் வார்டு-4ல் இணைக்கப்பட்டு தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து நீதிபதிகள், சங்கரலிங்கபுரம் வார்டு 5 எவ்வாறு வார்டுகள் 3 மற்றும் 4-ல் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் & நீர் வழங்கல் துறை தலைமை செயலர், தமிழ்நாடு வார்டு வரையறை ஆணையர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Madurai Power Shutdown - நாளை ஜூலை 18: மதுரையில் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா?
Madurai Power Shutdown - நாளை ஜூலை 18: மதுரையில் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா?
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Embed widget