மேலும் அறிய

சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுவதோடு விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த ஊராட்சியிலே தினசரி சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு பகுதிக்கு விளை பொருட்கள் செல்வதும் இந்த ஊராட்சிக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் சிவகங்கை பகுதியில், அங்குள்ள  ஊராட்சி ஒன்று முன்மாதிரியான ஊராட்சியாக மாறியுள்ளது. பல்வேறு கட்டமைப்பு வசதிகளை பெற்றதால், இந்த ஊராட்சிக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என்ற விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு  ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

சிவகங்கை அடுத்த அரசனூர் ஊராட்சியின் தலைவராக செல்வராணி ஐயப்பன் உள்ளார்.  பெண் ஊராட்சி மன்ற தலைவரான இவர் ஊராட்சியின் பொது மக்கள், அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி சாதித்துள்ளார். இதற்காக மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசனூர் ஊராட்சியில் செம்பூர், அரசனூர், திருமாஞ்சோலை, உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  ஊராட்சியின் முதல் பெண் தலைவராக செல்வராணி (33 - வயது) உள்ளார். எம்.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர் நான்கு வருடத்தில் ஊராட்சியை ரோடு வசதி, தெருவிளக்கு, குடி தண்ணீர், நீர்நிலை மேம்பாடு, மரம் வளர்த்தல், கண்மாய் தூர்வாருதல், பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு, சூமூக பேச்சுவார்த்தை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்திலும் தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி உள்ளார். இதனால் இந்த ஊராட்சிக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என்ற விருது கிடைத்துள்ளது.


சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு  ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணி நம்மிடம், “எங்களுடைய கிராமம் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாகத்தான் இருந்தது. தற்போது சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வாய்க்கால் அமைப்பது என ஏகப்பட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். இந்த முயற்சியால்  தன்னிறைவு பெற்றதாக மாறிய எங்கள் ஊராட்சி தமிழ்நாட்டில் முதல் ஊராட்சியாகவும், இந்திய அளவில் 4- வது ஊராட்சியாகவும் தேர்வு செய்து சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என பட்டம் கொடுத்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் ஒரு பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் பெண்கள் பிரச்னை, முதியவர்களின் பிரச்னை, குழந்தைகள் பிரச்னையை கூட எளிமையாக அணுக முடிகிறது.


சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு  ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

அதேபோல் விவசாய தேவைக்காக தண்ணீர் கிடைக்க குளம், கண்மாய், வரத்துக் கால்வாய் என அனைத்தையும் தூர்வாரினோம். இதனால் விவசாயம் பெருகியது. அதோடு நிற்காமல் கிராமத்திலேயே விளைவித்த விவசாய உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துதளையும் செய்து விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றினோம். இதனால் மில் வேலைக்கு சென்ற பலரும் விவசாய பணிக்கு திரும்பி, வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் கிராமத்தில் தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட்டது. தீண்டாமை இல்லாமல் எல்லோரும் சமத்துவமாக பழகும் நிலை ஏற்பட்டது. இப்படி கிராமத்தில் மூலை முடுக்கெல்லாம் பணி செய்தேன். இதனால் கிராமம் செழிப்பானது. அங்கன்வாடி முதல் தொடக்க பள்ளிக் கல்வி வரை திறம்பட அமைத்துக் கொடுத்தோம் இதனால் மாணவர்கள் நன்கு படித்து வருகின்றனர். இப்படி பல்வேறு பணிகளை செய்த நாங்கள் விருதிற்காக பதிவு செய்தோம். சமூக பாதுகாப்பிற்கான கிராமமாக மாறிய எங்கள் ஊராட்சியை அரசும் தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது” என்றார்.


சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு  ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

மேலும் கிராம மக்கள் கூறுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் அதிகம் உள்ள ஊராட்சியாக அரசனூர் மாறியுள்ளது. எங்கள் ஊராட்சியில்  4 நூற்பாலைகள், சிமிண்ட் பேவர் பிளாக் கம்பெனி என தொழில் வளம் நிறைந்துள்ளதால் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் யுனிவர்சிட்டி பொறியியல் கல்லூரிகள், சட்ட கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்றவை இருப்பதால் ஊராட்சிக்கு வரி வருவாய் அதிகம் கிடைக்கிறது.


சமூக பாதுகாப்புடைய ஊராட்சியாக அரசனூர் ஊராட்சி தேர்வு  ; விருது வழங்கி மத்திய அரசு அங்கீகாரம்

நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டதால் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுவதோடு விளைந்த பொருளை விற்பனை செய்ய எங்கள் ஊராட்சியிலே தினசரி சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு பகுதியிலிருந்து காய்கறி வாங்கிச் செல்வதும் இந்த ஊராட்சிக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது. எங்கள் ஊராட்சி இப்படி ஒரு விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget