மேலும் அறிய

Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்; மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கேரள குண்டு வெடிப்பு

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் மூன்று நாட்களாக யகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரார்த்தனை கூட்டமானது நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 2000 பேர் அந்த இடத்தில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அந்த மையத்தினுள் 3க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 36க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.



Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்; மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.

அதேசமயம் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்; மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

மதுரை ரயில் நிலையத்தில் தொடர் கண்காணிப்பு பணி

இந்த நிலையில் தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் வளாகம், பார்சல் சர்வீஸ், ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவிகளுடனும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும், அவர்களின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரயில் நிலையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.


Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்; மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை:

ஏற்கனவே அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து மாநில தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உள்துறை அமைச்சர் கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை தொடர்புக் கொண்டு பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்குமாறு என்ஐஏ மற்றும் என்எஸ்ஜிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கேரள குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு டொமினிக் மார்ட்டின் என்பவர் தானே பொறுப்பு என்று கூறி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 

இப்படியான நிலையில், கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வனத்துறையினர், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடம் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் படிக்க - Madurai: தேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை- ட்ரோன்களுக்கு 2 நாட்கள் தடை!

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
High Court Order: சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
High Court Order: சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Embed widget