மேலும் அறிய

மதுரை : பழங்கள் சாப்பிட வந்து கிணற்றில் விழுந்த தாய்க்கரடியும், குட்டியும் : மீட்புக்கு வனத்துறை தீவிர முயற்சி..!

கரடி தன் குட்டியுடன் கிணற்றில் விழுந்தது, 12 மணி நேர பாசப்போராட்டம் வனத்துறையினர் கரடிகளை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே தனது குட்டியுடன் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : பழங்கள் சாப்பிட வந்து கிணற்றில் விழுந்த தாய்க்கரடியும், குட்டியும் : மீட்புக்கு வனத்துறை தீவிர முயற்சி..!
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தொட்டப்ப நாயக்கணூரில் கன்னிமார் கோவில் அருகே முருகேசன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இப்பகுதியில் தான் மேற்குத் தொடர் மலை உள்ளதால் வனவிலங்களின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. மலைப்பாம்பு, மான், முயல் உள்ளிட்டவை அவ்வப்போது வந்து செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரை : பழங்கள் சாப்பிட வந்து கிணற்றில் விழுந்த தாய்க்கரடியும், குட்டியும் : மீட்புக்கு வனத்துறை தீவிர முயற்சி..!
முருகேசன் தோப்பில் உள்ள நாவல் மரத்தில் பழங்கள் சாப்பிட கரடி ஒன்று குட்டியுடன் வந்துள்ளது. இந்நிலையில் தவறுதலாக கரடி தன் குட்டியுடன் சுமார் 30 அடி கிணற்றில் விழுந்தது. இன்று காலை முதல் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை மீட்க போராடி வந்தனர். ஆனால் கரடி மற்றும் அதன் குட்டியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நாளை காலை கரடியை மீட்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை : பழங்கள் சாப்பிட வந்து கிணற்றில் விழுந்த தாய்க்கரடியும், குட்டியும் : மீட்புக்கு வனத்துறை தீவிர முயற்சி..!
இதனை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "சுமார் 12 மணி போராட்டத்தின் போதும் கரடியை மீட்க முடியவில்லை. நாளை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறும். மயக்க ஊசி உள்ளிட்ட நவீன வசதிகள் கோவை சுற்றுவட்டார பகுதியில் மட்டுமே உள்ளதால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை. எனினும் ஏணி, மரக்கிளை உள்ளிட்டவைகளை வைத்து முயற்சி செய்தோம் அவையும் தோல்வியில்தான் முடிந்தது. கிணற்றுக்குள் கூண்டு ஒன்றை இறக்கி பழங்களை வைத்தோம். ஆனாலும் கரடியும், அதன் குட்டியும் அதற்குள் செல்லவில்லை.

மதுரை : பழங்கள் சாப்பிட வந்து கிணற்றில் விழுந்த தாய்க்கரடியும், குட்டியும் : மீட்புக்கு வனத்துறை தீவிர முயற்சி..!
இரவு கரடியும் அதன் குட்டியும் வெளியேறும் வகையில் ஏணி மற்றும் மரக்கிளைகளை வைத்துள்ளோம். அதன் மூலம் வெளியேறும் என நம்புகிறோம். இல்லையெனில் சிறப்புப்படை மூலம் கரடியையும், கரடியின் குட்டியையும் காப்பாற்றி வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவோம். தற்போது இரவு நேரத்தில் சுழற்சி முறையில் 5 வனத்துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரடிக்கும், இப்பகுதி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் செயல்படுகிறோம்" என்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget