Crime : 2.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் மதுரையில் பறிமுதல்
மேலூரில் நள்ளிரவில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது 3 பேர் கைது. எஸ்.பியின் தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர்- மலம்பட்டி - சிவகங்கை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சந்தேகத்திற்கிடமாக திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சந்தேகத்திற்கிடமாக திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் பறிமுதல்@Rameshtamil10 pic.twitter.com/UePVIGkINg
— Arunchinna (@iamarunchinna) March 22, 2022




தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

