மேலும் அறிய

திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்.ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
திருப்பரங்குன்றம் தீபம்
 
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்ற வில்லை. இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று முன் தினம் மாலை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யக்கூடிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
 
மலைக்கு மேல் செல்ல முடியாது

இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது  நீதிபதி G.R சுவாமிநாதன்  காவல் ஆணையர் லோகநாதன் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார்.பின்னர்  காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜராகினார். இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன்  தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார். இதனால் காவல்துறைக்கும் வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மலைக்குச் செல்லும் பாதையின் முன்பாக அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோரும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். 
 
கைது நடவடிக்கை
 
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியும் கூட யாரும் செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட ‌அனைவரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பழங்காநத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களை சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக நிலைமையை கேட்டறிந்தார். இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் இரவு 11:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
 
ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 
 
போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய‌ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நயினார் நாகேந்திரன் உடன் வந்த 93 பேர் உள்பட இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பாஜகவினர் என மொத்தம் 113 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget