மேலும் அறிய

தேவையற்ற வாக்குவாதங்களுக்கு இட்டு செல்லுமா செய்திகள்? படிக்காமல் தவிர்க்கும் இளைய தலைமுறையினர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக, இளைய தலைமுறையினர், செய்திகளை படிக்காமல் தவிர்ப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக, இளைய தலைமுறையினர், செய்திகளை படிக்காமல் தவிர்ப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள 2022 ஆண்டுக்கான டிஜிட்டல் செய்தி அறிக்கையில் இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு நாடுகளில் செய்தி எப்படி உள்வாங்கப்படுகிறது என்பது குறித்து இந்த அறிக்கை விரிவாக அலசுகிறது. இணையம் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு 46 சந்தைகளில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், பத்திரிகைத்துறை, பொது மக்களுக்கிடையேயான தொடர்பு மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே செல்கிறது என்றும் பாரம்பரிய செய்தி நிறுவனங்களில் செய்திகள் படிப்பது குறைந்து கொண்டே செல்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களின் தாக்கம் குறையும் அதே சமயத்தில் அந்த இடத்தை இணைய செய்தி நிறுவனங்கள் பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செய்திகளை படித்து வந்தவர்கள் அதை தற்போது தவிர்த்து வருவது அதிகரித்து வருவதாகவும் அதுவும் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களை தவிர்ப்பது அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. செய்திகளை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என கேட்கப்பட்டதற்கு, அரசியல், கரோனா குறித்து ஒரே மாதிரியான செய்திகள் வருவதால் அதை படிப்பதற்கான உற்சாகம் குறைந்துள்ளது என 43 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை படித்து சோர்வடைந்துவிட்டதாக 29 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்துவிட்டதாக 29 சதவிகிதத்தினர் கருத்து பகிர்ந்துள்ளனர். கணக்கெடுப்பு எடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் (36%), குறிப்பாக 35 வயதுக்கு குறைவானவர்கள், செய்திகள் படிப்பதால் தங்களின் மனிநிலை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். 

தவிர்க்கக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களுக்கு செய்திகள் இட்டு செல்வதால் அதை தவிர்ப்பதாக 17 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் படிப்பதால் அதிகாரமற்றவர்களாக உணர்வதாக 16 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகளின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 36 சதவிகிதத்தினர் கருதுகின்றனர். தொழிலதிபர்களின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 35 சதவிகிதத்தினர் கருதுகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஆயுட்கால இலவச ரயில் பயணம்! நவம்பர் 1 முதல் புதிய சலுகை – யாரெல்லாம் பயன்பெறலாம்?
ஆயுட்கால இலவச ரயில் பயணம்! நவம்பர் 1 முதல் புதிய சலுகை – யாரெல்லாம் பயன்பெறலாம்?
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட், இண்டிகோ விமான கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்!
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட், இண்டிகோ விமான கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்!
பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
Tata Sierra: க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget