மேலும் அறிய

தேவையற்ற வாக்குவாதங்களுக்கு இட்டு செல்லுமா செய்திகள்? படிக்காமல் தவிர்க்கும் இளைய தலைமுறையினர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக, இளைய தலைமுறையினர், செய்திகளை படிக்காமல் தவிர்ப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக, இளைய தலைமுறையினர், செய்திகளை படிக்காமல் தவிர்ப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள 2022 ஆண்டுக்கான டிஜிட்டல் செய்தி அறிக்கையில் இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு நாடுகளில் செய்தி எப்படி உள்வாங்கப்படுகிறது என்பது குறித்து இந்த அறிக்கை விரிவாக அலசுகிறது. இணையம் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு 46 சந்தைகளில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், பத்திரிகைத்துறை, பொது மக்களுக்கிடையேயான தொடர்பு மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே செல்கிறது என்றும் பாரம்பரிய செய்தி நிறுவனங்களில் செய்திகள் படிப்பது குறைந்து கொண்டே செல்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களின் தாக்கம் குறையும் அதே சமயத்தில் அந்த இடத்தை இணைய செய்தி நிறுவனங்கள் பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செய்திகளை படித்து வந்தவர்கள் அதை தற்போது தவிர்த்து வருவது அதிகரித்து வருவதாகவும் அதுவும் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களை தவிர்ப்பது அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. செய்திகளை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என கேட்கப்பட்டதற்கு, அரசியல், கரோனா குறித்து ஒரே மாதிரியான செய்திகள் வருவதால் அதை படிப்பதற்கான உற்சாகம் குறைந்துள்ளது என 43 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை படித்து சோர்வடைந்துவிட்டதாக 29 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்துவிட்டதாக 29 சதவிகிதத்தினர் கருத்து பகிர்ந்துள்ளனர். கணக்கெடுப்பு எடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் (36%), குறிப்பாக 35 வயதுக்கு குறைவானவர்கள், செய்திகள் படிப்பதால் தங்களின் மனிநிலை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். 

தவிர்க்கக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களுக்கு செய்திகள் இட்டு செல்வதால் அதை தவிர்ப்பதாக 17 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் படிப்பதால் அதிகாரமற்றவர்களாக உணர்வதாக 16 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகளின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 36 சதவிகிதத்தினர் கருதுகின்றனர். தொழிலதிபர்களின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 35 சதவிகிதத்தினர் கருதுகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget