மேலும் அறிய

Vaccine for all affordability | புதிதாக நிர்ணயிக்கப்படும் விலை நடைமுறைகள்.. அனைவருக்கும் கிடைக்குமா கொரோனா தடுப்பூசி?

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மாநிலங்கள் நேரடியாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.95  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.14  லட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்தது. அதன்படி வரும் மே1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மாநிலங்கள் நேரடியாக வாங்கி கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. 

இதனைத் தொடர்ந்து நேற்று கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தனது புதிய விலையை அறிவித்தது. அதன்படி மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் ஒரு தடுப்பூசி 400 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு தடுப்பூசியின் விலை 600 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


Vaccine for all affordability | புதிதாக நிர்ணயிக்கப்படும் விலை நடைமுறைகள்.. அனைவருக்கும் கிடைக்குமா கொரோனா தடுப்பூசி?

கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டிற்கு மேலாக மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். அத்துடன் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி தொகையும் இன்னும் வராததால் மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. மேலும் மாநிலங்களில் உற்பத்தி தொழிலும் மிகவும் குறைந்துள்ளதால் மாநிலங்களுக்கு இந்த விலை பெரிய நிதி சுமையாக அமையும். மாநிலங்களால் போதிய நிதி திரட்டி நிறையே தடுப்பூசி வாங்க முடியவில்லை என்றால் மக்களுக்கு அடுத்து உள்ள ஒரே வாய்ப்பு தனியார் மருத்துவமனை தான். தனியார் மருத்துவமனையிலும் 600 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி என்றால் இரண்டு தடுப்பூசிக்கு 1200 ரூபாய் ஆகும். ஒரு நபருக்கு 1200 ரூபாய் என்றால் நான்கு பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக 4800 ரூபாய் செலவு ஆகும். 

இத்தகைய செலவு செய்து ஏழை எளிய மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் கடினம் தான். இதனால் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையே தான் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் எழுப்பியுள்ளார். 


Vaccine for all affordability | புதிதாக நிர்ணயிக்கப்படும் விலை நடைமுறைகள்.. அனைவருக்கும் கிடைக்குமா கொரோனா தடுப்பூசி?

இதுகுறித்து, “கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றால் அதை யார் செலுத்த வேண்டும் அரசா அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபரா?  இந்தியாவில் 18 வயது முதல் 44 வரை உள்ளவர்களில் எத்தனை பேர் ஒரு தடுப்பூசிக்கு 400 ரூபாய் செலவுசெய்யும் நிலையில் உள்ளனர்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

மேலும் மத்திய அரசு தன்வசம் கிடைக்கும் 50 சதவிகித தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி தனது உரையில் ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இதை மத்திய அரசு எவ்வாறு சாத்தியமாக்க போகிறது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து மாநில மக்களுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget