மேலும் அறிய

நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் ஜெயின் மதத்தவர்கள்...காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களின் முக்கிய புனித தளமான சமத் ஷிகர்ஜியை சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகின் பழமைவாய்ந்த மதங்களில் ஒன்றாக சமணம் (ஜெயினம்) உள்ளது. கிறிஸ்துவுக்கு முன்பு 599 முதல் 527 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மகாவீரர் இந்த மதத்தை நிறுவியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 0.37 சதவிகித்தினர் சமணர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள சமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பேசு பொருளாக மாறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களின் முக்கிய புனித தளமான சமத் ஷிகர்ஜியை சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புனித தலத்தின் புனிதம் கெட்டுவிடுமோ என அச்சம் கொண்டுள்ள அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதிரியாக போராட்டம் அறிவிப்பது புதிது இல்லை என்றாலும், சுற்றுலா தலத்தின் பட்டியலை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

கிர்டி மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலையின் உச்சியில் சம்மேட் ஷிகர்ஜி புனித தலம் அமைந்துள்ளது. சமணர்களின் முக்கிய பிரிவான திகம்பர் மற்றும் ஸ்வேதாம்பர் ஆகியோர் இந்த இடத்தை முக்கிய புனித தலமாக கருதுகின்றனர்.

இந்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுதான் என ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், "நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். இந்த விஷயத்தை சரியாக ஆராய்ந்த பிறகு முடிவெடுப்போம். இந்த விஷயத்தை நான் இன்னும் விரிவாக ஆராயவில்லை. ஆனால், இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பரஸ்நாத் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது. அப்போதைய மாநில பாஜக அரசு அளித்த திட்டத்தின்படி, சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில், ஏதேனும் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் தற்போது அந்த முடிவு திருத்தப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உண்ணாவிரதம் இருந்த சமண துறவி முனி சுக்யேய சாகர் செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மும்பையைத் தவிர, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானின் பல நகரங்களிலும், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget