மேலும் அறிய

ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. இந்திய ரயில்வே அறிவிப்பு..

முகக்கவசம் அணியாமல் ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நுழைபவர்களுக்கு குறைந்தது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நுழைபவர்களுக்கு குறைந்தது 500 ரூபாய் அபராதம் விதிக்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

கடந்த 24 மணிநேரத்தில் 2,34,692 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தில்லி,  சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பொதுமுடக்க காலத்தின் போது, கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி இந்திய ரயில்வே அமைச்சகம் படிப்படியாக பயணிகள் சேவையை தொடங்கியது.

மே ஒன்றாம் தேதியில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வந்த தொழிலாளர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மே 12-ஆம் தேதியில் இருந்து சிறப்பு ஏ.சி. ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து பகுதியளவுக்கு ரயில்வே சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. கடந்த மே 11-ஆம் தேதி ரயில்கள் இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில்,"உள்ளே நுழையும் போதும், பயணத்தின் போதும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும்"  என்று தெரிவிக்கப்பட்டது. 

 

ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. இந்திய ரயில்வே அறிவிப்பு..
காட்சிப் படம்

 

 

இந்திய ரயில்வே வாரியம் இந்த நெறிமுறையை தற்போது ரயில்வே சட்டம் 2012-இன் கீழ் இணைத்துள்ளது (Indian Railways (Penalties for activities affecting cleanliness at railway premises) Rules 2012). அதன்மூலம், தற்போதைய கோவிட் நோய் தொற்று சூழ்நிலை காரணமாக, சுகாதார விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ரயில் நிலைய அலுவலர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. இந்திய ரயில்வே அறிவிப்பு..
ரயில் நிலையம்

 

 

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் திரு சுனித் ஷர்மா ," ரயில் சேவைகளை நிறுத்தப் போவதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூடுதலாக 140 ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரயில்வேயிடம் உள்ள நான்காயிரம் ரயில்பெட்டிகளில்; கோவிட் 19 –க்கான சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் அவற்றை அனுப்பி வைப்பதற்கு ரயில்வே வாரியம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் 
 

தேவைக்கேற்ப ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். தற்போது சராசரியாக  நாள் ஒன்றுக்கு, 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
68
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 03:08 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Embed widget