மேலும் அறிய

Telangana Assembly Elections 2023: சீலிடப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்! தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு!

 Telangana Assembly Elections 2023: தெலங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

 Telangana Assembly Elections 2023:  தெலுங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 
 

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:

 
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 4 நான்கு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று கடைசி மாநிலமாக தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 
 
தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளிக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையிலும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். 

 

வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

 
மதியம் ஒரு மணி வரை மாநிலம் முழுவதும் 36.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை ஐந்து மணி நிலவரப்படி 63.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்டப்படி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்களை சீலிட்ட அதிகாரிகளை அதை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 
 
 
மொத்தமுள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு  அம்மாநில முதலமைச்சர் கேசிஆர், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பி.சஞ்சய் குமார், டி.அரவிந்த் உட்பட மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களமிறங்கி போட்டியிட்டுள்ளனர்.
 
மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் தனது வேட்பாளர்களை 119 இடங்களிலும்,  பாஜக 111 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) ஒரு இடத்தை அளித்து, மீதமுள்ள 118 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. ஐதராபாத் நகரின் 9 தொகுதிகளில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 
 
ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget