மேலும் அறிய

பாதிக்கப்பட்ட பெண் தலித்தாக இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர் தொட்டிருப்பது சந்தேகமே...கேரள நீதிபதி மீண்டும் சர்ச்சை

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி குறித்து நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள நீதிமன்ற நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்ததால், பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடையை பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்ததால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முகாந்திரம் இல்லை என அவர் தெரிவித்திருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

இச்சூழலில், இதற்கு முன்பே அவர் மற்றொரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர் சிவிக் சந்திரன்தான். அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சந்திரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த வழக்கில் கோழிக்கோடு அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். சாதி அமைப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சாதியை சேர்ந்தவராக இருப்பது அவருக்கு தெரிந்திருந்தால் அவரை சந்திரன் தொட்டிருப்பாரா என்பதை நம்ப கூட முடியவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவரின் எஸ்எஸ்எல்சி புத்தகத்தின் நகலில் அவர் ஜாதி பெயரைக் குறிப்பிட மறுத்திருப்பது தெரிய வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சீர்திருத்தவாதி. சாதி அமைப்புக்கு எதிராக போராடி, சாதியற்ற சமுதாயத்திற்காக எழுதி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர் அவரின் உடலை தொட்டிருப்பார் என்பது பெருத்த சந்தேகமே" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரன் இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒன்று, ஒரு தலித் எழுத்தாளர் தொடுத்த வழக்கு. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புத்தகக் கண்காட்சியின் போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்ரவரி 2020 இல் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி இளம் எழுத்தாளர் ஒருவர் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இரண்டு வழக்குகளிலும் சந்திரனின் வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டுகள் அனைத்து பொய்யானவை என விளக்கம் அளித்துள்ளனர். 

கடந்த 2020 ஆம் ஆண்டு, சந்திரன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. புகார்தாரரான இளம் எழுத்தாளர், பிப்ரவரி 8, 2020 அன்று நந்தி கடற்கரையில் உள்ள முகாமில் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார்.

ஜாமீன் கோரிய மனுவுடன், 74 வயதான சந்திரன், புகார்தாரரின் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை ஒத்திவைத்த கோழிக்கோடு அமர்வு நீதிமன்றம், "பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடைகளை பாதிக்கப்பட்ட சிறுமி அணிந்திருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவு இதற்கு பொருந்தாது" என தெரிவித்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget