மேலும் அறிய

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே காலத்தில் நடத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரம் முன்பு இல்லாதா அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 


அதேபோல், ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகினாலோ மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும்.  அதுவரை அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தான் நடைபெறும். 

இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இதை எல்லாம் காதில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சட்டம் குறித்து கருத்துக்களை பெறுவதற்காகவும், அதை ஆய்வு செய்து தொகுத்து வழங்குவதற்காகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழு தனது விவரங்களை மத்திய அரசு முன்னிலையைில் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது இருக்கும் ஒரே வேலை, அனைத்து மாநில அரசுகளையும் சமாதானப்படுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். 

ஏனெனில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் மத்திய அரசுக்கு வேண்டும். தற்போது மத்திய அரசின் கூட்டணி பெரும்பான்மையோடு இருந்தாலும், இந்த பலத்துடன் இல்லை.


அதாவது மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 292 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஆனால் 3ல் 2 பங்கு பலத்தை பெற 364 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மாநிலங்களவையில் 245 எம்பிக்களில் 112பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இது போதாது. 3ல் 2 பங்கு பலம் வேண்டும் எனில் குறைந்தபட்சம் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவேதான் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.


இந்நிலையில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் ஆக இருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதே நேரம் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget