மேலும் அறிய

Union Budget : டிஜிட்டல் பண பரிவர்த்தனை முதல் ஜிஎஸ்டி வரை...மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள்...

2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் கீழ் இதுவரை மொத்தமாக 11 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் அறிக்கையாக ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு, வரலாற்றில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த மோடி, பிரதமராக பதவியேற்றார். இவரின் ஆட்சி காலத்தில், நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுகுறித்து கீழே காண்போம்.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் கீழ் இதுவரை மொத்தமாக 11 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 9 ஆண்டு காலத்தில், அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நிதியமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். 

அதில், 2014 முதல் 2019 வரையில், பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சி காலத்தில், அருண் ஜெட்லியே ஐந்து முறையும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். 

பட்ஜெட் பற்றி பிற கட்டுரைகள்: Five Year Plans: மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட வரலாற்றை கைவிட்டு பாஜக அரசு சாதித்தது என்ன? ஓர் அலசல்

ஆனால், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், உடல் நல குறைபாட்டால் இடைக்கால பட்ஜெட்டை அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், பொறுப்பு நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமன் வசம் சென்றது. இதன் பின்னர், 2019 ஜூலை, 2020 பிப்ரவரி, 2021 பிப்ரவரி, 2022 பிப்ரவரி ஆகிய ஆண்டுகளில் அவரே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது ஐந்தாவது பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்திய பட்ஜெட் அறிக்கை பாரம்பரிய பிரீஃப்கேஸில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல், நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக ஆன பிறகு, சிவப்பு நிறத்தினாலான தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட பையில் பட்ஜெட் அறிக்கை கொண்டு வரப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதல்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. 

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே நாள் இறவில் அறிவிக்கப்பட்டது அடுத்து தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கடந்த 2017ஆம் ஆண்டு, ஒரே நாடு ஒரு வரியை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையில் இது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டு, உலகின் 10 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. மோடியின் ஆட்சியின் கீழ் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது.

அதேபோல, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும் 2029ஆம் ஆண்டுக்குள் ஜப்பானையும் வளர்ச்சி விகித்தில் பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget