மேலும் அறிய

Five Year Plans: மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட வரலாற்றை கைவிட்டு பாஜக அரசு சாதித்தது என்ன? ஓர் அலசல்

நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்து கைவிடப்பட்ட ஐந்து ஆண்டு திட்டங்களின் வரலாறும், அதனை கைவிட்ட பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த நிதி ஆயோக் குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு நாட்டின் பல்துறை வளர்ச்சிக்காக, அன்றைய பிரதமர் மோடி எடுத்த முக்கிய முன்னெடுப்பு ”ஐந்தாண்டு திட்டம்”. சோவியத் ஒன்றியம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக எட்டியதால் , அந்த வகையிலான திட்டமிடலை மேற்கொள்வதன் மூலமே இந்தியாவும் விரைவாகப் பொருளாதார வளர்ச்சியை காண முடியும் என நேரு நம்பியதாக கூறப்படுகிறது.

முதல் ஐந்தாண்டு திட்டம்:

பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தன்னிறைவு என்ற நோக்கத்திலான இந்த பயணத்திற்கான திட்டக்குழு பிரதமரால் தொடங்கப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, வளங்களைப் பெருக்கி, சமச்சீராகப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் சமுதாய நலனை உயர்த்தத் திட்டமிடுதலே இதன் முதன்மை பணி ஆகும். 1951ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கமே விவசாயத் துறையை முன்னேற்றுவதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் எதிர்பார்த்ததை விட இந்திய அரசுக்கு கூடுதல் வெற்றியே கிடைத்தது. தனிநபர் வருமானம் 8% உயர்ந்தது. வளர்ச்சி இலக்கான 2.6% தாண்டி, 8.6% வளர்ச்சி கிடைத்தது.

12 ஐந்தாண்டு திட்டங்கள்:

அதைதொடர்ந்து 11 ஐந்தாண்டு திட்டங்கள், தொழில்துறை, சுதந்திரமான பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, தற்சார்பு நிலை, சுரங்கத்தொழில், வறுமை ஒழிப்பு, தொழில்துறை தற்சார்பு, வேலைவாய்ப்பு கல்வி, சமூக நலம் சமுதாய நலன், சமூக நீதியுடன்கூடிய சமமான பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருவாயை இருமடங்கு உயர்த்துவது, விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி என பல்வேறு நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டது. இறுதியாக 2012-2017 காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்ட 12வது ஐந்தாண்டு திட்டம்,   சமுதாய வளர்ச்சி நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முக்கியமாக விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்களில் ஏற்றம், இறக்கம் , வளர்ச்சி மற்றும் பின்னடைவு என மாறி மாறி இருந்தாலும், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு திட்டக்குழு மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன. 

நிதி  ஆயோக்:

இத்தகையை வரலாற்று சிறப்புமிக்க ஐந்தாண்டு திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக நிதி ஆயோக் குழுவை அமைத்தது. இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என அழைக்கபப்டும், இந்த குழவிற்கு திட்டக்குழுவை போன்று நிதி வழங்கவோ அல்லது மாநிலங்கள் சார்பாக முடிவெடுக்கவோ அதிகாரம் இல்லை. இது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.

நிதி ஆயோக்கின் பணிகள்:

வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல்.  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல்.  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல். நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல். அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமல்படுத்துதல்.  கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல். சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல்.  சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழிலதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல் என, ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவது மட்டுமே நிதி ஆயோக்கின் பணிகள் ஆகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget