மேலும் அறிய

Five Year Plans: மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட வரலாற்றை கைவிட்டு பாஜக அரசு சாதித்தது என்ன? ஓர் அலசல்

நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்து கைவிடப்பட்ட ஐந்து ஆண்டு திட்டங்களின் வரலாறும், அதனை கைவிட்ட பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த நிதி ஆயோக் குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு நாட்டின் பல்துறை வளர்ச்சிக்காக, அன்றைய பிரதமர் மோடி எடுத்த முக்கிய முன்னெடுப்பு ”ஐந்தாண்டு திட்டம்”. சோவியத் ஒன்றியம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக எட்டியதால் , அந்த வகையிலான திட்டமிடலை மேற்கொள்வதன் மூலமே இந்தியாவும் விரைவாகப் பொருளாதார வளர்ச்சியை காண முடியும் என நேரு நம்பியதாக கூறப்படுகிறது.

முதல் ஐந்தாண்டு திட்டம்:

பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தன்னிறைவு என்ற நோக்கத்திலான இந்த பயணத்திற்கான திட்டக்குழு பிரதமரால் தொடங்கப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, வளங்களைப் பெருக்கி, சமச்சீராகப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் சமுதாய நலனை உயர்த்தத் திட்டமிடுதலே இதன் முதன்மை பணி ஆகும். 1951ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கமே விவசாயத் துறையை முன்னேற்றுவதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் எதிர்பார்த்ததை விட இந்திய அரசுக்கு கூடுதல் வெற்றியே கிடைத்தது. தனிநபர் வருமானம் 8% உயர்ந்தது. வளர்ச்சி இலக்கான 2.6% தாண்டி, 8.6% வளர்ச்சி கிடைத்தது.

12 ஐந்தாண்டு திட்டங்கள்:

அதைதொடர்ந்து 11 ஐந்தாண்டு திட்டங்கள், தொழில்துறை, சுதந்திரமான பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, தற்சார்பு நிலை, சுரங்கத்தொழில், வறுமை ஒழிப்பு, தொழில்துறை தற்சார்பு, வேலைவாய்ப்பு கல்வி, சமூக நலம் சமுதாய நலன், சமூக நீதியுடன்கூடிய சமமான பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருவாயை இருமடங்கு உயர்த்துவது, விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி என பல்வேறு நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டது. இறுதியாக 2012-2017 காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்ட 12வது ஐந்தாண்டு திட்டம்,   சமுதாய வளர்ச்சி நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முக்கியமாக விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்களில் ஏற்றம், இறக்கம் , வளர்ச்சி மற்றும் பின்னடைவு என மாறி மாறி இருந்தாலும், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு திட்டக்குழு மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன. 

நிதி  ஆயோக்:

இத்தகையை வரலாற்று சிறப்புமிக்க ஐந்தாண்டு திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக நிதி ஆயோக் குழுவை அமைத்தது. இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என அழைக்கபப்டும், இந்த குழவிற்கு திட்டக்குழுவை போன்று நிதி வழங்கவோ அல்லது மாநிலங்கள் சார்பாக முடிவெடுக்கவோ அதிகாரம் இல்லை. இது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.

நிதி ஆயோக்கின் பணிகள்:

வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல்.  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல்.  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல். நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல். அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமல்படுத்துதல்.  கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல். சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல்.  சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழிலதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல் என, ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவது மட்டுமே நிதி ஆயோக்கின் பணிகள் ஆகும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget