மேலும் அறிய

Corona Positive Story: 96 வயது புஷ்பா சர்மா கொரோனாவை வென்ற கதை தெரியுமா?

எனக்கு மட்டுமல்ல என் வீட்டில் அனைவரும், எங்கள் குடியிருப்புப் பகுதியில் அனைவருமே சாய்ஜி (பாட்டியை செல்லமாக அப்படித்தான் குனால் அழைக்கிறார்) பற்றி கவலை கொண்டோம். ஆனால், எப்போதும் வீல் சேரில் அங்குமிங்கும் சுழன்று கொண்டிருக்கும் சாய்ஜி படுக்கையில் அமைதியாக இருந்தார். ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அதுதான் அவரை இன்று மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

சிலருக்கு கொரோனா வந்துவிடுமோ என அச்சம், இன்னும் சிலருக்கு கொரோனா வந்துவிட்டதே என அச்சம். ‛தினம் அச்சப்பட்டு வாழும் வாழ்க்கை எதற்கு,’ என்ற பாடல்வரிதான் நினைவுக்கு வந்து செல்கிறது.
உலகமே ஒரு பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் அனைவருமே போராளிகள் தான் என்ற எண்ணத்துடன் துணிவை வரவழைத்துக் கொள்வதே முதல் அருமருந்து.
அப்படியான எண்ணமும், வாழ்ந்தாக வேண்டும் என்ற வாழ்க்கையின் மீதான பிடிப்பும்தான் 96 வயது புஷ்பா சர்மாவை கரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளது.
 

Corona Positive Story: 96 வயது புஷ்பா சர்மா கொரோனாவை வென்ற கதை தெரியுமா?
 
டெல்லியைச் சேர்ந்தவர் புஷ்பா சர்மா (96). தனது மகன் அருண் குமார் (67), மருமகள் மீனா (64) ஆகியோருடன் நவீன் ஷ்ரத்தா பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் மகன், மருமகளும் தொற்றுக்குள்ளானார்கள். ஆனால், மே 9ம் தேதியன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் புஷ்பா சர்மா பூரண நலத்துடன் இருப்பது தெரியவந்தது.
மொத்த குடும்பமும் எப்படி கொரோனாவை வென்றது? அதுவும் குறிப்பாக தனது 96 வயது பாட்டி புஷ்பாவின் துணிச்சல் பற்றி பேரன் குனால் (35) கூறுகிறார். குனால் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இருக்கிறார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறியவை உங்களுக்கு வியப்பளிக்கலாம், 
 
‛‛டெல்லியில் இரண்டாவது அலை கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே எங்கள் அனைவருக்கும் பீதி ஏற்பட்டிருந்தது. அன்றாடம் வரும் செய்திகளும், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறையும் மனதில் இறுக்கத்தைக் கொடுத்திருந்தது.
எங்கள் பயத்தைக் கூட்டுவது போல் கொரோனா ஆட்கொண்டது. நான், எனது மனைவி, அம்மா, அப்பா, பாட்டி என அனைவருக்கும் கோவிட் பாசிட்டிவ். பாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், அவர் தனது காய்ச்சல் பற்றியோ உடல் வலி பற்றியோ எதுவும் புலம்பவில்லை. அவருக்கு சி ரியாக்டிவ் புரோட்டீன் எனப்படும் , சிபிஆர் பரிசோதனை மேற்கொண்டோம்.

Corona Positive Story: 96 வயது புஷ்பா சர்மா கொரோனாவை வென்ற கதை தெரியுமா?
 
அதில் 82 புள்ளிகள் காட்டியது. இது நோய்த்தொற்று மிகவும் அதிகமாக இருப்பதற்கான அறிகுறி. எனக்கு மட்டுமல்ல என் வீட்டில் அனைவரும், எங்கள் குடியிருப்புப் பகுதியில் அனைவருமே சாய்ஜி (பாட்டியை செல்லமாக அப்படித்தான் குனால் அழைக்கிறார்) பற்றி கவலை கொண்டோம்.
ஆனால், எப்போதும் வீல் சேரில் அங்குமிங்கும் சுழன்று கொண்டிருக்கும் சாய்ஜி படுக்கையில் அமைதியாக இருந்தார். ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அதுதான் அவரை இன்று மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.
 
வீட்டில் அப்பாவும், அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பரவாயில்லை நாம் நேர்மறை சிந்தனைகளை கைவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். விளைவு இன்று வீட்டிலிருந்தபடியே கரோனாவை வென்றிருக்கிறோம். 
சாய்ஜியின் போராட்டத்திலிருந்து நாம் அனைவரும் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டால் உடனே பதற்றமடையக் கூடாது. மருந்துகளை உட்கொண்டு போராட வேண்டும். இன்று சாய்ஜியைப் பார்த்து எங்களின் குடியிருப்புப் பகுதி முழுவதுமே புது உத்வேகத்துடன் இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரின் வாட்ஸ் அப்பில் இன்றளவும் வாழ்த்துக் குறிப்புகள் குவிகின்றன,’’ என்று குனால் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
 
ஆகையால் கரோனா அச்சம் உங்களைத் துரத்தும் போதெல்லாம் புஷ்பா சர்மாவின் வெற்றிக் கதைகள் போன்ற பல உத்வேகக் கதைகளைப் படியுங்கள். நான் போராடித்தான் ஆகவேண்டும். அதற்குத் துணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், எப்போதும் மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி சோபு கொண்டு கழுவுதல் போன்ற பேராயுதங்களை எடுத்துக் கொள்வோம்.
 

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget