மேலும் அறிய

Karnataka Bandh: காவிரி நீர் விவகாரம்; கர்நாடக முழுவதும் நாளை பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கீடுவது தொடர்பாக பல காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகாவில் பந்த்:

அதற்கு, அந்த மாநில விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தற்போது வினாடிக்க 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், அந்த மாநில விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மாநிலம் தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் ஆகியோர் இந்த மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பந்த் காரணமாக அந்த மாநிலத்தில் போக்குவரத்து நாளை மிக கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் நடைபெற உள்ளது.

போக்குவரத்து பாதிப்பு, கடைகள் அடைப்பு:

மாநிலம் தழுவிய இந்த பந்த் காரணமாக நாளை அந்த மாநிலத்தில் உள்ள கடைகள், முக்கிய வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும், இந்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் பொதுப்போக்குவரத்தும் செயல்படாது என்றே கருதப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நாளை அந்த மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட உள்ளது. ஐ.டி. உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

கூடுதல் பாதுகாப்பு:

மாநிலம் தழுவிய இந்த பந்த் காரணமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் யூபர், ஓலா உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஓலா, யூபர் நயன்டஹல்லி – டவுன்ஹால் வரை பேரணி நடத்த உள்ளனர். இந்த பந்திற்கு சுமார் 1900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கன்னட ஒக்குடா அமைப்பின் தலைவர் வாட்டல் நாகராஜ் தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்து, தனியார் சேவைகள் நாளை பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் ரத்து:

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பல ஆண்டுகாலமாக நடக்கும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர் பிரச்சினை நீடிப்பதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் நாளை இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget