மேலும் அறிய

"சித்தராமையாவுக்கு பயம்..நான் முதலமைச்சரா இருந்திருந்தேனா"..அரசியலில் புயலை கிளப்பிய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.!

சித்தராமையா குறித்து டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. 
முதலமைச்சர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அதிகார போட்டியா?

இறுதியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக இருப்பார் என்றும் ஃபார்முலா வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். பிரச்னைக்கு தீர்வு கண்ட போதிலும், இருவருக்கிடையே அதிகார போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சித்தராமையா குறித்து டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடர பயந்த ஒரு திட்டத்தை நான் முதலமைச்சராக இருந்திருந்தால் முன்னெடுத்திருப்பேன் என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

"சித்தராமையாவுக்கு பயம்"

விஜயநகரப் பேரரசு ஆட்சி காலத்தில் பெங்களூரு நகரை உருவாக்கியவர் மன்னர் கெம்பேகவுடா. இவரது பிறந்த நாள் விழாவில் பேசிய 
டி.கே. சிவக்குமார், "சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களை அமைக்க பல கோரிக்கைகளை பெற்றேன். 2017 ஆம் ஆண்டில், பெங்களூருவில் எஃகு மேம்பாலத்திற்கு எதிரான போராட்டங்களை கண்டு முதலமைச்சர் சித்தராமையாவும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜும் பயந்தனர். 

நானாக இருந்திருந்தால் போராட்டக்காரர்களின் சத்தத்திற்கு அடிபணிந்திருக்க மாட்டேன். திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பேன்" என்றார். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்து குறித்து அமைச்சர் பிரியங் கார்கே பேசுகையில், "சித்தராமையா பயந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. 

மக்கள் கருத்தை உணர்ந்து  முதலமைச்சர் செயல்படுகிறார். சில நேரங்களில், தவறான தகவல்கள் பரவி, நல்ல முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். அதைதான், துணை முதலமைச்சர் சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்" என்றார். 

சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக காங்கிரஸ் தரப்பில் கூறினாலும், அது சிறிது காலத்திற்குதான் நீடிக்கும் என்றும் அதன் பின்னர், அரசில் பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழும் என்றும் பாஜக கூறி வருகிறது.  இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர். அசோகா கூறுகையில், "முதலமைச்சர் சித்தராமையா அமைதியாக இருந்தாலும் துணை முதலமைச்சர் சிவக்குமார் அதிரடியாக பேசி விடுகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் சிவக்குமார் முதலமைச்சருக்கு முன்பாக பேசுகிறார்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Premium Bikes Launch 2026: Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Embed widget