மேலும் அறிய

Rajasthan Accident: ராஜஸ்தானில் சோகம்! டிராக்டர் மீது டெம்போ மோதி 15 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி?

Rajasthan Accident: பிகானரில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வந்த ஒரு தனியார் பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிராக்டருடன் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது டெம்போ டிராவலர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

கோர விபத்து:

பிகானரில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வந்த ஒரு தனியார் பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிராக்டருடன் மோதியது. இதில் டெம்போ டிராவலரானது கடுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷ்னர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் தெரிவிக்கையில் “சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சிறந்த சிகிச்சை பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்,” என்று கூறினார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்:

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பஜன் லால் சர்மா வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சேவையையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

"பலோடியின் மடோடா பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் துயரமானது மற்றும் மனதைப் பிழிகிறது. துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சையை உறுதி செய்ய மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்," என்று முதல்வர் X இல் பதிவிட்டுள்ளார்.

அசோக் கெலாட் இரங்கல்: 

முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் "பலோடியின் மடோடாவில் நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக எனக்கு இப்போதுதான் செய்தி கிடைத்தது. இதைக் கேட்டு என் இதயம் மிகவும் வருத்தமடைந்தது. இறந்த அனைவருக்கும் அவரது புனித பாதங்களில் இடம் அளிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு வலிமை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அசோக் கெலாட் X இல் பதிவிட்டுள்ளார். 

கடந்த மாதம் ஜெய்சால்மரில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்ததில் 26 பேர் உயிருடன் எரிந்து இறந்தனர். ஏ/சி-யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் வெளியேறும் வாயில் இல்லை. விபத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத மாற்றம் மற்றும் அனுமதி விதிமுறைகளை மீறுவதற்கு எதிராக போக்குவரத்துத் துறை தீவிர சோதனையை நடத்தினர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
TN Roundup: திருச்செந்தூரில் தடை இல்லை, SIR திமுக ஆலோசனை, எடப்பாடி ஆவேசம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்செந்தூரில் தடை இல்லை, SIR திமுக ஆலோசனை, எடப்பாடி ஆவேசம் - தமிழகத்தில் இதுவரை
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Embed widget