மேலும் அறிய

மக்கள் நல பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாதம் 7, 500 சம்பளத்தில் வேலையிழந்த மக்கள் நல பணியாளர்களை வேலையில் அமர்த்திய தமிழக அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போல் இந்த திட்டமும் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை 1991-ல் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் தொடர்ந்தது. இறுதியாக 2011-ம் ஆண்டு 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனை பெரும்பாலான மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணி வழங்கியதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள்து. ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர் நியமனம் தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget