மேலும் அறிய

PM Modi In Rajya Sabha : ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி..!

PM Modi In Rajya Sabha : ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா என திமுக உறுப்பினர்களை பார்த்து மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

PM Modi In Rajya Sabha: நாடாளுமன்றததில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில், அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வந்தனர். பிரதமர் மோடி இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மக்களவையில் பேசிய மோடி எதிர்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நேரு குடும்பத்தை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பெயரை அவரது குடும்பத்தினர் ஏன் அவர்களின் பெயர்களின் பின்னால் வைத்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நேருவை எங்கேயாவது குறிப்பிடத் தவறினால், அவர்கள் (காங்கிரஸ்) வருத்தப்படுகிறார்கள். நேரு அவ்வளவு பெரிய மனிதர், பிறகு ஏன் அவர்கள் யாரும் நேரு குடும்பப்பெயரை பயன்படுத்துவதில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் என்ன அவமானம்? இந்த நாடு எந்த குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல" 

அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பேசிய பிரதமர், "நாங்கள் மாநிலங்களுக்கு பிரச்சனை என்று கூறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை 90 முறை கவிழ்த்துள்ளனர். ஒரு காங்கிரஸ் பிரதமர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய 356 ஐ ஐம்பது முறை பயன்படுத்தினார். அதுதான் இந்திரா காந்தி.

எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசினாலும் தாமரை (பாஜகவின் சின்னம்) மலரும். சில உறுப்பினர்களின் நடத்தை மற்றும் தொனி முழு நாட்டிற்கும் ஏமாற்றமளிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ, அவ்வளவு தாமரை மலரும். தாமரை மலர உதவிய எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்போம்" என்றார்.

 

ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா என திமுக உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பிய மோடி, "கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் ஆட்சிகள் காங்கிரஸ் கட்சியால் கலைக்கப்பட்டன" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget