மேலும் அறிய

Vande Bharat Express: அதிவேகமாக ஓடிகொண்டிருந்த ஒடிசா வந்தே பாரத் ரயில்.. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..!

ஒடிசாவின் தேன்கனல் - அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயிலின் மீது அவ்வபோது கல் வீச்சு சம்பவம் நடந்து  வருகிறது. அந்த வகையில், ஒடிசாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசாவின் தேன்கனல் - அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, ரூர்கேலா-புவனேஸ்வர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20835) ரயிலின் எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியின் ஜன்னல் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூர்கெல்லா புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசப்பட்டதாக முதலில் ஆர்பிஎப் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டாக்கில் இருந்து RPF இன் உதவி பாதுகாப்பு ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலில் கல்வீச்சு சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்களை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே துறையினர் இரண்டு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள், உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கல் வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே (ECOR) பொதுமக்களுக்கு, குறிப்பாக ரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ரயில்கள் மீது கற்களை எறியக் கூடாது என்றும், இந்த சம்பவங்கள் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரயில்வே மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை.

இது முதல்முறை அல்ல.. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி - போபால் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து கடந்த ஐந்து மாதங்களில் பதிவான 6வது சம்பவம் இதுவாகும். நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நல்லவேளையாக இதுவரை எந்த ஒரு சம்பவத்திலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இதேபோல், கடந்த மே மாதத்தில் கூட, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதுகுறித்து சம்பவத்தின்போது தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”திருநாவாயா - திரூர் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது கல் வீச்சு நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Embed widget