மேலும் அறிய

Vande Bharat Express: அதிவேகமாக ஓடிகொண்டிருந்த ஒடிசா வந்தே பாரத் ரயில்.. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..!

ஒடிசாவின் தேன்கனல் - அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயிலின் மீது அவ்வபோது கல் வீச்சு சம்பவம் நடந்து  வருகிறது. அந்த வகையில், ஒடிசாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசாவின் தேன்கனல் - அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, ரூர்கேலா-புவனேஸ்வர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20835) ரயிலின் எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியின் ஜன்னல் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூர்கெல்லா புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசப்பட்டதாக முதலில் ஆர்பிஎப் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டாக்கில் இருந்து RPF இன் உதவி பாதுகாப்பு ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலில் கல்வீச்சு சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்களை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே துறையினர் இரண்டு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள், உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கல் வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே (ECOR) பொதுமக்களுக்கு, குறிப்பாக ரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ரயில்கள் மீது கற்களை எறியக் கூடாது என்றும், இந்த சம்பவங்கள் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரயில்வே மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை.

இது முதல்முறை அல்ல.. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி - போபால் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து கடந்த ஐந்து மாதங்களில் பதிவான 6வது சம்பவம் இதுவாகும். நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நல்லவேளையாக இதுவரை எந்த ஒரு சம்பவத்திலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இதேபோல், கடந்த மே மாதத்தில் கூட, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதுகுறித்து சம்பவத்தின்போது தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”திருநாவாயா - திரூர் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது கல் வீச்சு நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
US Iran Peace Deal Impact: ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?
ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்.. சென்னை? தமிழக வானிலை
இடி, மின்னலுடன் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்.. சென்னை? தமிழக வானிலை
உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!
உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!
Seeman: விஜய் செய்வது ஜனநாயக துரோகம்.. வில்லன் கூட இப்படி பண்ண மாட்டான்.. சீமான் கொந்தளிப்பு!
Seeman: விஜய் செய்வது ஜனநாயக துரோகம்.. வில்லன் கூட இப்படி பண்ண மாட்டான்.. சீமான் கொந்தளிப்பு!
ஐந்தாண்டுகளில் 3 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும் காவிரி டெல்டா!
ஐந்தாண்டுகளில் 3 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும் காவிரி டெல்டா!
வண்டலூர் உள்ளிட்ட 3 பூங்காவிற்கு 2 நாட்கள் கட்டணம் இல்லை - அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!
வண்டலூர் உள்ளிட்ட 3 பூங்காவிற்கு 2 நாட்கள் கட்டணம் இல்லை - அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!
Embed widget