மேலும் அறிய

NGT fine on Delhi: குப்பை கழிவுகள் மேலாண்மையில் குறைபாடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதம்

குப்பை கழிவுகள் மேலாண்மை செய்வதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.

குப்பை கழிவுகளை முறையற்ற முறையில் மேலாண்மை செய்தமைக்காக சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ .900 கோடியை செலுத்துமாறு டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளை, சரியாக மேலாண்மை செய்யவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.

300 லட்சம் மெட்ரிக் டன் குப்பை:

இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளில் உள்ள குப்பை கழிவுகளின் அளவு 300 லட்சம் மெட்ரிக் டன்கள் இருப்பதாக தெரிவித்தது.

மேலும், சுமார் 80 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த நிலை டெல்லியின் சுற்றுச் சூழல் குறித்த மோசமான நிலையை காண்பிப்பதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.

குப்பை கிடங்குகளால், நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமன்றி, மீத்தேன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்ச்சியாக வெளியேறுகிறது. இதனால் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் சுவாசக் காற்றும், குடிக்கும் நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரிதான மற்றும் விலை உயர்ந்த பொது நிலங்கள் குப்பை கொட்டும் இடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மோசமான நிலைமையை சரிசெய்ய அவசரகால நடவடிக்கைகள் தேவை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது

ரூ.900 கோடி அபராதம்:

இந்த மூன்று குப்பைத் கூடங்களில் மலைபோல் குவிந்துள்ள, மூன்று கோடி மெட்ரிக் டன் அளவிலான கழிவுகளின் அளவைக் கருத்தில் கொண்டு, ரூ .900 கோடி சுற்றுச்சூழல் இழப்பீட்டாக வழங்க வேண்டும் என டெல்லி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவாகும் கழிவுகளை தற்போதைய கழிவுகளுடன் சேர்க்கப்படாமல் இருப்பதையும், விதிமுறைகளின்படி கழிவுகள் அகற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. 

இதையடுத்து, குப்பைகள் அகற்றுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை டிசம்பர் 31, 2022 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Also Read: Bomb Threat: மாஸ்கோவில் இருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget