மேலும் அறிய

மோடியை புகழ்ந்ததால் ஆணையத் தலைவர் ஆனாரா மிஸ்ரா? யார் இந்த அருண் குமார் மிஸ்ரா?

2020 பிப்ரவரியில் பிரதமர் மோடியை அப்போது பணியிலிருந்த ஒரு நீதிபதி, ஆகா ஓகோவெனப் புகழ்ந்து நாட்டின் நீதித்துறைக்கு அதிர்ச்சியூட்டினார். அண்மைக்காலமாக நீதித்துறையில் அரங்கேறிவரும் பல அதிர்ச்சிகளில் ஒன்றாக அதுவும் அமைந்தது. அந்த ’நீதிமான்’தான் இப்போதைய மனிதவுரிமை ஆணையத் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.

தேசிய மனிதவுரிமை ஆணையத்தின் எட்டாவது தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா எனப்படும் அருண் குமார் மிஸ்ரா புதன் அன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். இவரின் நியமனம் கடும் சர்ச்சைக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஏ.கே.மிஸ்ராவின் நியமனத்தை விமர்சனம் செய்திருக்கின்றனர்.


மோடியை புகழ்ந்ததால் ஆணையத் தலைவர் ஆனாரா மிஸ்ரா? யார் இந்த அருண் குமார் மிஸ்ரா?
அப்படி என்னதான் செய்துவிட்டார், திருவாளர் மிஸ்ரா?
மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனாகப் பிறந்த ஏ.கே.மிஸ்ரா, 23 வயதில் வழக்குரைஞராகப் பதிவுசெய்துகொண்டார். மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளையில் 1999வரை வழக்குகளை நடத்தியவர், இடையில் சட்டக்கல்லூரி விரிவுரையாளராகவும் 1991 முதல் ஐந்து ஆண்டுகள் குவாலியர், ஜிவாஜி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் ஆசிரியராகவும் வேலைசெய்துள்ளார். தந்தை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆயிற்றே.. அவரின் வளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

வழக்குரைஞராகப் பதிந்து 12ஆவது ஆண்டில் பார் கவுன்சில் உறுப்பினராவது அவ்வளவு சாதாரண காரியமா.. என்ன? 1989, 95 என இரண்டு முறை அதன் உறுப்பினராக இருந்தது மட்டுமில்லாமல், 92-95 காலகட்டத்தில் பார் கவுன்சில் துணைத்தலைவர் பதவியிலும் இருந்துள்ளார். அடுத்து என்ன அகில இந்திய பார் கவுன்சில்தான்..!

1997-98 காலகட்டத்தில் இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவராகவும் ஆனார். 98 மே 15ஆம் தேதி முதல் 99 அக்டோபர் 24வரை தலைவராகவும் இருந்தார், ஏ.கே.மிஸ்ரா. பெங்களூர் தேசிய சட்டப்பள்ளியிலும் பார் கவுன்சிலின் கல்விக் குழு முதலிய பல்வேறு குழுக்களிலும் இடம் பிடித்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக, 1999 அக்டோபரில் ம.பி. உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.

பிறகு, ராஜஸ்தான், கொல்கத்தா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி பதவிகளிலும் இருந்தார், ஏ.கே. பிறகு, 2014 -ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி உயர்த்தப்பட்டார்.  

இவ்வளவு ’பெருமை’களைக் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா, 27 ஆண்டு கால மரபுக்கு மாறாக, மனிதவுரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு சட்டத்தடை ஏதும் இல்லை. இருந்தது..இப்போது இல்லை!

ஆம், மனிதவுரிமை ஆணையத் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும் எனக் கூறிய மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை 2019-ல் திருத்தி அமைத்துவிட்டார்கள். எப்படி..? உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவரை ஆணையத் தலைவராக அமர்த்தலாம் என்பதுதான் அந்தத் திருத்தம். அதுவே இப்போதைய நியமனத்துக்கு அடிகோலியிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தேர்வுக் குழுவில் அரசுக்கு மாற்றான ஒரே பிரதிநிதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பட்டியல் சமூகத்தவரின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்; அதற்கேற்ப இந்தத் தேர்வு அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்படி ஒரு சட்டப்பிரிவு இல்லையென பதில் கூறப்பட்டுள்ளது. மனிதவுரிமை ஆணையத்துக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை, சமூகரீதியான பிரச்னைகள்தான் என்பதையும் அவர் அழுத்தமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார்.


மோடியை புகழ்ந்ததால் ஆணையத் தலைவர் ஆனாரா மிஸ்ரா? யார் இந்த அருண் குமார் மிஸ்ரா?
அதன் பிறகும் அவர் சொல் அம்பலம் ஏறவில்லை. தேர்வுக்குழுவில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அவரின் குரலுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பே இருக்காது என்பதை மத்திய அரசுத் தரப்பில் உணர்த்திவிட்டார்கள். 
ஆனாலும் கார்கே தன்னுடைய கருத்தை அரசுக்குப் பதியவைக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டார்.
 
முக்கியமான ஒரு சேதி, 2020 பிப்ரவரியில் பிரதமர் மோடியை அப்போது பணியிலிருந்த ஒரு நீதிபதி, ஆகா ஓகோவெனப் புகழ்ந்து நாட்டின் நீதித்துறைக்கு அதிர்ச்சியூட்டினார். அண்மைக்காலமாக நீதித்துறையில் அரங்கேறிவரும் பல அதிர்ச்சிகளில் ஒன்றாக அதுவும் அமைந்தது. அந்த ’நீதிமான்’தான் இப்போதைய மனிதவுரிமை ஆணையத் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.
இவருக்கு முன்னால், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஐந்து பேர் இந்தப் பதவியில் நியமிக்கப்படக்கூடிய வரிசையில் இருக்கின்றனர். அவர்களில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட பிரபல ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
Embed widget