மேலும் அறிய

LGBTQ சமூக மக்களுக்கு ஆதரவாக பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்: நேர்காணலில் அளித்த பளீச் பதில்!

தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர்.

சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால்தான் வேறுபாடுகளை கடந்து, ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் ஒரு இயல்பான நிகழ்வே.

ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் தன்பாலீர்ப்பு திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. 

இச்சூழலில், தன்பாலீர்ப்பு திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரி உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், LGBTQ சமூக மக்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ஆர்கனைசருக்கு அவர் அளித்த நேர்காணலில், "சமூகத்தில் அவர்களும் தங்களுக்கென தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் இந்தக் கருத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இத்தகைய மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்; மனிதர்கள் இருக்கும் வரை இருப்பார்கள். இது உயிரியல், வாழ்க்கை முறை. அவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்று உணர வேண்டும். இது எளிதான விவகாரம். இந்தக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

ஏனென்றால், அதைத் தீர்ப்பதற்கான மற்ற எல்லா வழிகளும் பயனற்றவை. நீங்கள் பார்க்கிறீர்கள், இந்து சமுதாயம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் அந்நிய ஆக்கிரமிப்புகள், வெளிநாட்டு தாக்கங்கள் மற்றும் வெளிநாட்டு சதிகளுக்கு எதிராக நடந்து வருகிறது. 

இந்த காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளது. மற்றவர்களும் வழங்கியுள்ளனர். அதைப் பற்றிப் பேசியவர்கள் ஏராளம். இந்த காரணங்களால்தான் இந்து சமுதாயம் விழித்திருக்கிறது. போரில் ஈடுபடுபவர்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கையானது.

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா பிரிக்கப்படாமல் (அகண்ட்) இருந்து வருகிறது, ஆனால், அடிப்படை இந்து உணர்வு மறக்கப்படும்போதெல்லாம் நாடு பிரிக்கப்பட்டது.

 

எளிமையான உண்மை இதுதான். ஹிந்துஸ்தான் இந்துஸ்தானமாக இருக்க வேண்டும். இந்தியாவில் இன்று வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் அதே சமயம், முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்" என்றார்.

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget