மேலும் அறிய

LGBTQ சமூக மக்களுக்கு ஆதரவாக பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்: நேர்காணலில் அளித்த பளீச் பதில்!

தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர்.

சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால்தான் வேறுபாடுகளை கடந்து, ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் ஒரு இயல்பான நிகழ்வே.

ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் தன்பாலீர்ப்பு திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. 

இச்சூழலில், தன்பாலீர்ப்பு திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரி உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், LGBTQ சமூக மக்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ஆர்கனைசருக்கு அவர் அளித்த நேர்காணலில், "சமூகத்தில் அவர்களும் தங்களுக்கென தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் இந்தக் கருத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இத்தகைய மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்; மனிதர்கள் இருக்கும் வரை இருப்பார்கள். இது உயிரியல், வாழ்க்கை முறை. அவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட இடத்தை வைத்திருக்க வேண்டும். அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்று உணர வேண்டும். இது எளிதான விவகாரம். இந்தக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

ஏனென்றால், அதைத் தீர்ப்பதற்கான மற்ற எல்லா வழிகளும் பயனற்றவை. நீங்கள் பார்க்கிறீர்கள், இந்து சமுதாயம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் அந்நிய ஆக்கிரமிப்புகள், வெளிநாட்டு தாக்கங்கள் மற்றும் வெளிநாட்டு சதிகளுக்கு எதிராக நடந்து வருகிறது. 

இந்த காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளது. மற்றவர்களும் வழங்கியுள்ளனர். அதைப் பற்றிப் பேசியவர்கள் ஏராளம். இந்த காரணங்களால்தான் இந்து சமுதாயம் விழித்திருக்கிறது. போரில் ஈடுபடுபவர்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கையானது.

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா பிரிக்கப்படாமல் (அகண்ட்) இருந்து வருகிறது, ஆனால், அடிப்படை இந்து உணர்வு மறக்கப்படும்போதெல்லாம் நாடு பிரிக்கப்பட்டது.

 

எளிமையான உண்மை இதுதான். ஹிந்துஸ்தான் இந்துஸ்தானமாக இருக்க வேண்டும். இந்தியாவில் இன்று வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் அதே சமயம், முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget