மேலும் அறிய

Bangladesh MP: பெரும் பரபரப்பு! வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை - என்ன நடந்தது?

கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு நாட்டு அரசு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாகவும், நட்பு நாடுகளில் ஒன்றாகவும் திகழ்வது வங்கதேசம். அந்த நாட்டில் உள்ள ஆவாமி லீக் கட்சியின் எம்.பி. அன்வருல் ஆசீம் அனர். இவர் கடந்த மே 12ம் தேதி இந்தியாவிற்கு வந்தார்.

வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் கொலை:

மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அவர் வந்திருந்தார். அவரை மே 14ம் தேதிக்கு பிறகு யாரும் பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  அண்டை நாட்டு எம்.பி. என்பதால் இவர் மாயமான தகவல் குறித்து ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள அன்வருல் ஆசிமின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை. அவர் கடைசியாக தங்கியிருந்த சஞ்சீவ கார்டன் குடியிருப்பில் ரத்தக்கறைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ காரணங்களுக்காக அவர் கடந்த 12ம் தேதி கொல்கத்தாவிற்கு வந்திருந்தார்.

3 பேர் கைது:

அங்கு அவர் பாராநகரில் உள்ள அவரது நண்பருக்கு சொந்தமான சஞ்சீவ் கார்டன் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் டெல்லி வந்தடைந்ததும் தனது குடும்பத்தினருக்கு தனது செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 8 நாட்களாக மாயமாகியிருந்த வங்கதேச எம்.பி. கண்டுபிடிக்கப்பட்டு விடுவார் என்று கருதிய ஆதரவாளர்களுக்கு, அவரது மரண செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச நாட்டு அரசுக்கும், அந்த நாட்டு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கதேச போலீசார் அந்த நாட்டில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம் எங்கே?

இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசீமின் சடலத்தை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுளளனர்.  

இந்த கொலைக்கான காரணம் என்ன? மாயமான அவரது சடலம் எங்கே? 8 நாட்களாகியும் ஏன் அவரது உடலை கண்டுபிடிக்க இயலவில்லை? என்று பலவேறு கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி

மேலும் படிக்க: Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget