மேலும் அறிய

Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

Mahila Court Judgment திருவண்ணாமலை அருகே தனிக்குடுத்தனம் செல்ல மறுப்பு தெரிவித்த மாமியாரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனையும் உடன் இருந்தவர்ககுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது

திருவண்ணாமலை தாமரை நகர் பத்தாவது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவருடைய  மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகன் சிவசங்கர் சென்னையில் உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் ஆதிலட்சுமி தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதிலட்சுமியை  சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஆதிலட்சுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் இறந்த ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கரும் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது சத்யா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வந்தார்.


Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

மருமகள் கூலிப்படை வைத்து மாமியார் கொலை 

திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சத்தியா கூறியதால் அவருக்கும் ஆதிலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து சத்யா சென்னை கொரட்டூரில் வசிக்கும் தன் அண்ணன் பிரபு என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் திருவண்ணாமலை சமுத்திர காலனியைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் சரண் என்கின்ற சரண்குமார் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன் திராவழி தெருவை சேர்ந்த முகமது அலி ஆகியோர் கொண்ட கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது இதனை அடுத்து மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் சத்யா மற்றும் அவரது அண்ணன் பிரபு கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஆறு நபர்களை நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு 

இந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற அவலாகத்தில் உள்ள மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக வீணா தேவி ஆஜராகினார். வழக்கை விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்தார். அதில் திட்டம் தீட்டி கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி கொலை செய்த பிரபு மற்றும் ஆனஸ்ட்ராஜ் சரண் பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் .தலா 3000 அபராதமும் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget