மேலும் அறிய

Ganga River Pollution: கங்கைக்கு சங்கு ஊதும் கொரோனா கவசங்கள் - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்!

மருத்துவக் கழிவு, மீன்பிடி சாதனங்கள் ஆகிய மட்காத பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்வளச் சூழல் மாசுபடுத்தியுள்ளதுடன் அவற்றின் வாழிடத்தையும் அழித்துள்ளது என்கிறது ஆய்வு முடிவு

இறந்தவர்களின் உடல்களை கங்கையாற்றில் அப்படியே வீசியெறிவது, கரையோரம் எரிப்பது ஆகியவற்றால், உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் பெரும் சுகாதாரச் சிக்கல் உருவானது. இந்த நிலையில் கொரோனா முகக்கவசம், முழு பாதுகாப்புக் கவசம் ஆகிய மக்காதபொருள்களை முறையாகச் சிதைக்காமல் கங்கையில் போடுவதும் சூழல் அபாயத்தை பெருகச்செய்துள்ளது. அத்துடன் கங்கையாற்றின் உயிரிப்பன்மையத்துக்கும் நீண்டகால பாதிப்பை உண்டாக்கும் என சுற்றுச்சூழல் காப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. மற்ற எல்லா ஆறுகளைப் போலவே கங்கையும் தனித்த சூழலமைப்பைக் கொண்டுள்ளது. நதியில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இது, கங்கையின் சூழலமைவுக்கு பெரும் கேடாக மாறியுள்ளது என்கின்றனர் கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கத்தினர்.

”ஆற்றங்கரைகளில் சடலங்களை எரிப்பதும் அவற்றை அப்படியே தண்ணீருக்குள் வீசுவதும் நீர் மாசுபடுவதற்கும் தொற்றுக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இது மட்டுமின்றி ஆற்றில் கொட்டப்படும் மற்ற கழிவுகளும் அவற்றின் மக்காத தன்மையால் அதே அளவுக்கு சமமான அபாயமானது நீண்டகாலத்துக்கு இருக்கும்படி செய்கின்றன” எனக் கூறியுள்ளார், அந்த இயக்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் சசிகாத் சுக்லா.

கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் கவசங்களை எப்படி கையாளவேண்டும் என தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், கவச உடை, முகக்கவசம், கையுறை மற்றும் பிற கொரோனா மருத்துவக் கழிவுகளை கங்கையாற்றில் கொட்டிவருகின்றனர். எப்படியும் இவை ஆற்றில் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 15 முதல் 20 சதவீதம்வரை கூடுதலான மருத்துவக் கழிவுகள் கங்கையில் கொட்டப்பட்டுள்ளது என்பது ஒரு தரப்பு சுற்றுச்சூழல் வல்லுநர்களின் மதிப்பீடு. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மருத்துவக் கழிவு, மீன்பிடி சாதனங்கள் ஆகிய மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்வளச் சூழலை மாசுபடுத்தியுள்ளதுடன் அவற்றின் வாழிடத்தையும் அழித்துள்ளதும் தெரியவந்தது.    
கங்கையாற்றின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதால் ஏற்கெனவே அது கடும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதன் மூலம் நீருக்குள் இருக்கவேண்டிய வரம்பைவிட மிக அதிகமாக- 100 மிலிக்கு 100 மில்லியன் ஆக மனிதக்கழிவுத் துகள் அடர்த்தி பெருகிவிட்டது. இது, குளிப்பதற்குக்கூட லாயக்கு இல்லாததாக கங்கைநீரை மாற்றிவிடும். ஏற்கெனவே மாசுபடுத்தப்பட்டுவரும் ஆற்று நீரை கோவிட் வகையறா கழிவுகள் மேலும் மோசமாக மாசுபடுத்துகின்றன என வருத்தத்துடன் கூறுகின்றனர், கங்கைப் பாதுகாப்பு இயக்கத்தினர். கங்கையாற்றின் முதன்மையான ஓட்டத்தில் கோம்தி, ராம்கங்கா ஆகிய காரியத் தலங்களில் அதிகமாக கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவை, அந்தப் பகுதிகளில் ஆற்றில் பெரும் மாசுபாட்டை உண்டாக்குகின்றன என்று கூறப்படுகிறது. 
 
அதிகரித்துவரும் இந்த மாசுபாட்டைத் தடுக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளநிலையில், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிங்கள் இதில் தலையிட்டுள்ளன. இந்திய நச்சியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கங்கையாற்று நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இத்துடன், சடலங்கள் வீசப்படும் ஆற்றங்கரைப் பகுதிகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க முடிவுசெய்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Petrol-Diesel Price: Cut ஆன ரஷ்யா எண்ணெய்; மீண்டும் உயரப் போகும் பெட்ரோல் டீசல் விலை.? வெளியான ஷாக் நியூஸ்.!
Cut ஆன ரஷ்யா எண்ணெய்; மீண்டும் உயரப் போகும் பெட்ரோல் டீசல் விலை.? வெளியான ஷாக் நியூஸ்.!
Top 10 News Headlines: அதிமுகவிலிருந்து விலகிய செம்மலை, கேரள முதல்வர் பதவியேற்பு, ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
அதிமுகவிலிருந்து விலகிய செம்மலை, கேரள முதல்வர் பதவியேற்பு, ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தவெக தொண்டர்களுக்கு ரஜினி அறிவுரை, அமைச்சர் மகன் கைது, RCB சாதிக்குமா? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தவெக தொண்டர்களுக்கு ரஜினி அறிவுரை, அமைச்சர் மகன் கைது, RCB சாதிக்குமா? - 11 மணி வரை இன்று
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Seeman: CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் - “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றிய இபிஎஸ்.! அதிமுகவில் அடுத்து என்ன.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றிய இபிஎஸ்.! அதிமுகவில் அடுத்து என்ன.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Embed widget