மேலும் அறிய

Manipur Violence: நாட்டையே உலுக்கிய கலவரம்; பதற்றத்தில் இருந்து மீளாத மக்கள் - மணிப்பூரில் இயல்புநிலை திரும்புவது எப்போது?

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நேற்று முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

மணிப்பூரில் நடந்த கலவரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களை கண்காணிப்பதற்காக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவ ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை நிலைநிறுத்தப்பட்டது.

முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நிலைமை  சற்று இயல்புநிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, அமலில் இருந்த ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நேற்று முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மேலும் வன்முறை அல்லது நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்க அனைத்து குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என பிரேன் சிங் தெரிவித்துள்ளார். களத்தில் நிலவும் சூழலை ஆராய மூத்த அரசு அதிகாரிகள், துணை ராணுவ படையினர் ஆகியோருடன் இணைய வழி கூட்டத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் கலந்து கொண்டார்.

இயல்பு வாழ்க்கை திரும்புமா?

இதையடுத்து, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர், மாநிலத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாத பிரிவினருக்கிடையே நடந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர இரு பிரிவினரின் சிவில் சமூக அமைப்புடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பதற்றம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இரு பிரிவினரும் ஒப்புக்கொண்டனர். சில பகுதிகளில் சிறிய சிறிய வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.

மணிப்பூர் முழுவதும் சுமார் 14 பாதுகாப்புப் படை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 20 பாதுகாப்புப் படை பிரிவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று காலை மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஊரடங்கு மூன்று மணி நேரம் தளர்த்தப்பட்டது.

மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

மணிப்பூரில் என்ன பிரச்னை?

மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget