மேலும் அறிய

Pakistan Spy : காதல் நாடகமாடிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.. ரகசிய தகவல்களை பகிர்ந்த பியூன்..நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்கள் பகிரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, புஜ் நகரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காதல் நாடகமாடி மயக்கிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்:

குற்றம்சாட்டப்பட்ட நிலேஷ் பாலியா 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக புஜ் நகரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள மத்திய பொதுப்பணித் துறையின் மின் துறை அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருகிறார். இவரை நேற்று கைது செய்த மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்க அனுமதி கோர உள்ளது.

என்ன நடந்தது என்பதை விரிவாக விவரித்துள்ள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் சுனில் ஜோஷி, "இந்தாண்டு ஜனவரி மாதம், பாகிஸ்தான் உளவுதுறை பெண் அதிகாரியை நிலேஷ் பாலியா தொடர்பு கொண்டுள்ளார். கட்டப்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை கட்டிடங்களில் மின்மயமாக்கல் பணிகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள், சிவில் துறைகள் தொடர்பான சில ஆவணங்களையும் அவருடன் பாலியா பகிர்ந்து கொண்டார்.

அந்த பெண் அதிகாரி, பாலியாவை  வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். ஆசை வார்த்தைகளை கூறி, அவரை மயக்கி பணத்திற்காக ரகசிய தகவல்களை பகிர வைத்துள்ளார். தன்னை 'அதிதி திவாரி' என்று அறிமுகம் செய்து கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக பாலியாவிடம் கூறியுள்ளார். 

ரகசிய தகவல்களை பகிர்ந்தது எப்படி?

இந்த தகவல்கள், தன்னுடைய வேலைக்கு தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். அதற்காக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். காதல் செய்வது போல நாடகமாடி அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்றுள்ளார். தகவல்களை அளித்ததற்காக பணமும் பெற்றுள்ளார்.

இணைய பரிவர்த்தனைகள் மூலம் அவருக்கு மொத்தம் 28,800 ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரது தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, அவர் வேறு யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை விசாரிக்க உள்ளது.

அவரது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்ற பிறகு, பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரைக் கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரை விசாரணைக்கு அழைப்பதற்கு முன்பு அவரது தொலைபேசி பதிவுகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்துள்ளது. ரகசிய காப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 121-ஏ, 123, 120-B உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget