மேலும் அறிய

Pakistan Spy : காதல் நாடகமாடிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.. ரகசிய தகவல்களை பகிர்ந்த பியூன்..நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்கள் பகிரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, புஜ் நகரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காதல் நாடகமாடி மயக்கிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்:

குற்றம்சாட்டப்பட்ட நிலேஷ் பாலியா 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக புஜ் நகரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள மத்திய பொதுப்பணித் துறையின் மின் துறை அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருகிறார். இவரை நேற்று கைது செய்த மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்க அனுமதி கோர உள்ளது.

என்ன நடந்தது என்பதை விரிவாக விவரித்துள்ள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் சுனில் ஜோஷி, "இந்தாண்டு ஜனவரி மாதம், பாகிஸ்தான் உளவுதுறை பெண் அதிகாரியை நிலேஷ் பாலியா தொடர்பு கொண்டுள்ளார். கட்டப்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை கட்டிடங்களில் மின்மயமாக்கல் பணிகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள், சிவில் துறைகள் தொடர்பான சில ஆவணங்களையும் அவருடன் பாலியா பகிர்ந்து கொண்டார்.

அந்த பெண் அதிகாரி, பாலியாவை  வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். ஆசை வார்த்தைகளை கூறி, அவரை மயக்கி பணத்திற்காக ரகசிய தகவல்களை பகிர வைத்துள்ளார். தன்னை 'அதிதி திவாரி' என்று அறிமுகம் செய்து கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக பாலியாவிடம் கூறியுள்ளார். 

ரகசிய தகவல்களை பகிர்ந்தது எப்படி?

இந்த தகவல்கள், தன்னுடைய வேலைக்கு தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். அதற்காக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். காதல் செய்வது போல நாடகமாடி அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்றுள்ளார். தகவல்களை அளித்ததற்காக பணமும் பெற்றுள்ளார்.

இணைய பரிவர்த்தனைகள் மூலம் அவருக்கு மொத்தம் 28,800 ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரது தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, அவர் வேறு யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை விசாரிக்க உள்ளது.

அவரது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்ற பிறகு, பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரைக் கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரை விசாரணைக்கு அழைப்பதற்கு முன்பு அவரது தொலைபேசி பதிவுகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்துள்ளது. ரகசிய காப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 121-ஏ, 123, 120-B உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget