மேலும் அறிய

தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் சிக்கலானது - பொருளாதார நிபுணர் அர்விந்த் சுப்பிரமணியன்..

Arvind Subramanian on vaccine Price: இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது/அரசியலாக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது/அரசியலாக்கப்பட்டுள்ளது  என்று பொருளியலாளரும் முன்னாள் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞருமான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் கணக்கில், " இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது. இது, அரசியலாக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டார்.       

மேலும், மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தில் இந்தியா  பின்பற்றவேண்டிய மூன்று எளிய கொள்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

1. தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை அரசு செலுத்தவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. 

2. இந்தியா முழுவதும் தடுப்பு மருந்துகளின் விலை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். அந்த விலை ஜீரோவாக இருத்தல் வேண்டும்.  நாடு முழுவதும் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மருந்துகளின் விலை நிர்ணயத்தில் உள்ள வேறுபாடு தேவையற்றது, சிக்கலானது, அறநெறியற்றது மற்றும் எளிதாக செயல்படுத்த முடியாதது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடும். 

3.  அனைத்து தடுப்பு மருந்துகளின் கொள்முதல் செலவுகளை மத்திய அரசே ஏற்கவேண்டும். 

ஏன்?

- வைரஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மதிப்பதில்லை.
- மாநிலங்களை விட  மத்திய அரசே சிறந்த நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது.  
- காப்பாற்றப்படப் போகும் மனித உயிர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பு மருந்துகளுக்கான "நிதி செலவுகள்" மிகவும் அற்பமானவை - அரவிந்த் சுப்பிரமணியன் தனது ட்விட்டர் குறிப்பில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, மத்திய அரசு மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை அறிவித்தது. இதன் படி, கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர். மேலும் , தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள்  தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்,  முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும். தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது " என்று தெரிவித்தது.  

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget