மேலும் அறிய

தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் சிக்கலானது - பொருளாதார நிபுணர் அர்விந்த் சுப்பிரமணியன்..

Arvind Subramanian on vaccine Price: இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது/அரசியலாக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது/அரசியலாக்கப்பட்டுள்ளது  என்று பொருளியலாளரும் முன்னாள் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞருமான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் கணக்கில், " இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது. இது, அரசியலாக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டார்.       

மேலும், மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தில் இந்தியா  பின்பற்றவேண்டிய மூன்று எளிய கொள்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

1. தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை அரசு செலுத்தவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. 

2. இந்தியா முழுவதும் தடுப்பு மருந்துகளின் விலை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். அந்த விலை ஜீரோவாக இருத்தல் வேண்டும்.  நாடு முழுவதும் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மருந்துகளின் விலை நிர்ணயத்தில் உள்ள வேறுபாடு தேவையற்றது, சிக்கலானது, அறநெறியற்றது மற்றும் எளிதாக செயல்படுத்த முடியாதது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடும். 

3.  அனைத்து தடுப்பு மருந்துகளின் கொள்முதல் செலவுகளை மத்திய அரசே ஏற்கவேண்டும். 

ஏன்?

- வைரஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மதிப்பதில்லை.
- மாநிலங்களை விட  மத்திய அரசே சிறந்த நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது.  
- காப்பாற்றப்படப் போகும் மனித உயிர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பு மருந்துகளுக்கான "நிதி செலவுகள்" மிகவும் அற்பமானவை - அரவிந்த் சுப்பிரமணியன் தனது ட்விட்டர் குறிப்பில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, மத்திய அரசு மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை அறிவித்தது. இதன் படி, கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர். மேலும் , தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள்  தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்,  முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும். தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது " என்று தெரிவித்தது.  

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget