மேலும் அறிய

பெரும் துயரம் நடந்த இடத்தில் வண்ண விளக்குகளா? சர்ச்சையில் ஜாலியன் வாலாபாக் நினைவு சின்னம்!

தியாகம் என்றால் என்ன என்று தெரியாதவர்களால் தான் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்த முடியும்.- ராகுல்காந்தி

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா கொடுத்த விலை மிகப்பெரியது. சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ துயரங்கள் நடந்திருந்தாலும், இப்போது நினைத்தாலும் பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தான். ஜெனரல் டயர் என்ற கொடுங்கோலன்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சுட உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் காக்கை, குருவிகளை சுடுவதைப்போல சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 சுவர்களுக்குள் மாட்டிக்கொண்ட அப்பாவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

100 ஆண்டுகளைக் கடந்த இந்த பெருந்துயரம் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற இடத்தை  சீரமைத்து, அழகுபடுத்தியிருக்கிறது மத்திய அரசு. இரவு நேரங்களில் கண்கவர் வண்ண விளக்குகளால் ஒளிரும் இந்த இடத்தை தான் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது தான் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

ஜாலியன் வாலாபாக் செல்லும் குறுகிய வழியில் உள்ள சுவற்றில் தற்போது சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றது. சுவற்றில் குண்டுகள் பட்ட இடங்கள் அதன் தனித் தன்மையை இழந்திருக்கின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த மொத்த இடமும் சீரமைப்பிற்குப் பிறகு மாறிப்போயிருக்கிறது. அப்படி ஒரு படுகொலை நடந்த உணர்வையே அந்த இடம் பிரதிபலிக்கவில்லை. ஒரு பெரும்துயரம் நடைபெற்ற இடத்தை வண்ண விளக்குகளை ஒளிரச்செய்து கொண்டாடுவது சரிதானா? என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகளை முன் வைக்கின்றனர் விமர்சகர்கள்.


பெரும் துயரம் நடந்த இடத்தில் வண்ண விளக்குகளா? சர்ச்சையில் ஜாலியன் வாலாபாக் நினைவு சின்னம்!

காங்கிரஸ் ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் சேதமடைந்து கிடந்த ஜாலியன் வாலாபாக்கை, வரலாற்றுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் அதை சீரமைத்திருக்கிறார். அதை வரவேற்காமல் வழக்கம்போல காங்கிரஸ் அதில் அரசியல் செய்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் பாஜகவினர்.

தியாகம் என்றால் என்ன என்று தெரியாதவர்களால் தான் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்த முடியும். தியாகியின் மகனாகிய என்னால் இந்த அவமரியாதையை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்திருக்கிறார் ராகுல்காந்தி. 

வரலாற்று நிகழ்விடங்களை சீரமைப்பது என்பது அவை எப்படி இருந்ததோ, அதன் எந்த தோற்றமும் மாறாமல் அப்படியே சீரமைப்பது தான் அந்த இடத்தின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கும். வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்குச் சென்றால் அது அந்த வரலாற்றை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் இருக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் எல்லாம் அப்படியே தான் பாதுகாக்கப்படுகின்றன. பாதி அழிந்திருக்கிறது என்பதற்காக அவைகள் வரையப்படுவதில்லை. அப்படி வரைந்தால் அது வரலாற்றை சிதைத்துவிடும். இந்த தவறு தான் ஜாலியன் வாலாபாக் விஷயத்தில் நடந்திருக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக வலைதளவாசிகளும் எதிர்கட்சியினரும்.

உங்களுக்கு வரலாறு தெரியாது என்றால், உங்களுக்கு எதுவும் தெரியாது; தான் மரத்தின் ஒரு பகுதிதான் என்று தெரியாத இலையைப் போன்றவர்கள் நீங்கள் என்ற பிரபல எழுத்தாளர் மைக்கேல் க்ரிக்டனின் இந்த வாசகம் இந்த நிகழ்வுக்குப் பொருந்தும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget