மேலும் அறிய

கொரோனா மருந்து பதுக்கல்; கவுதம் காம்பீர் மீது நடவடிக்கை!

டெல்லியில் தட்டுப்பாடுள்ள ஒரு மருந்தை உரிமம் ஏதும் இல்லாமல் பாஜக எம்பி கவுதம் கம்பீரின் அறக்கட்டளை பதுக்கி வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் கவுதம் கம்பீர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது

கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி அதிக பாதிப்புகளை சந்தித்த டெல்லி தற்போது மீண்டு  வருகிறது.  முழு ஊரடங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் என கொரோனாவை கட்டுப்படுத்தியது டெல்லி. தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஃபாபிஃப்ளூ  என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதிக தேவை காரணமாக இந்த மருந்துக்கு டெல்லியில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் ஃபாபிஃப்ளூ மருந்து தட்டுப்பாடே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஒரு மருந்துக்கு டெல்லியே அலைந்துகொண்டிருக்கும் நிலையில் கவுதம் கம்பீருக்கு மட்டும் தாராளமாக எப்படி கிடைக்கிறது என அதிர்ச்சி அடைந்த தீபக் சிங் என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


கொரோனா மருந்து பதுக்கல்;  கவுதம் காம்பீர் மீது நடவடிக்கை!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து உரிய அறிக்கை வேண்டுமென டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டது.மே 31ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம். அறிக்கையை பார்த்து கோபமடைந்த நீதிமன்றம், இந்த அறிக்கையால் பயனில்லை.  எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை.  ஒரே நேரத்தில் ஒருவரால் எப்படி நிறைய மருந்துகளை வாங்க முடியும்? இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இருக்கிறது.  நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எங்கள் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள். விளைவு பயங்கரமாக இருக்கும் என கொந்தளித்தது நீதிமன்றம். இதனையடுத்து கவுதம் கம்பீர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என  டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!


இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கூலாக ''நான் ஒரு மனிதன், மனிதகுலத்தை பாதிக்கும் அனைத்தும் என்னைப் பற்றியது'' என்ற பகத்சிங்கின் வார்த்தைகளை ட்வீட் செய்துள்ளார் கவுதம் கம்பீர். மேலும் தன்னுடைய விளக்கத்தில் இதுமாதிரியான பணிகளை தொடருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


கொரோனா மருந்து பதுக்கல்;  கவுதம் காம்பீர் மீது நடவடிக்கை!

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், மக்களுக்கு பிரச்னையை அவர்களே உண்டாக்கிவிட்டு அதனை சரிசெய்பவர்கள் போல அவர்களே மீண்டும் தோன்றுவது கண்டிக்கத்தக்கது. இது தொடரும் எனவும் தனிநபர் கூறுகிறார். இது தொடர்ந்தால் இதனை எப்படி கையாள்வது என நீதிமன்றத்துக்கு தெரியும் என காட்டமாக கூறியுள்ளது.  ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பாஜகவின் கவுதம் கம்பீர் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் எம் எல் ஏ பிரவீன் குமார் என்பவரும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் தொடர்ந்து கேரளம் முதலிடம்; தமிழகத்திற்கு 2-வது இடம்!


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Breaking News LIVE :அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்
Breaking News LIVE : அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Embed widget