மேலும் அறிய

‛யூ ஆர் அண்டர் அரெஸ்ட்...’ கொலை வழக்கில் குட்டியுடன் யானை கைது!

யானைத் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் போலீசார், குட்டியுடன் தாய் யானையை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

சிறுவனைக்கொன்ற வழக்கில் தாய் யானையும், குட்டி யானையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும்  பொருந்தும் என்பது உண்மை தான். ஆனால் வனவிலங்குகளுக்காக என்ற கேள்வியினை ஏற்படுத்தியது கொலை வழக்கு ஒன்றில் யானைகள் கைதான சம்பவம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில், கோலாகட் மாவட்டத்தில் போகாகத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜித்தேன் கோகாய் என்பவர் யானைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் 14 வயதான சிறுவன் ஒருவர் தேயிலைத்தோட்டத்திற்கு அருகில் சுற்றித்திரிந்த குட்டி யானையினை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அருகில் இருந்த யானை தாய்ப்பாசத்தில், தனது குழந்தையினை ஏதோ செய்கிறார்கள் என்று அறிந்து அச்சிறுவனைத்தாக்கியதோடு மிதித்து கொலையும் செய்துள்ளது.

 

இதனையடுத்து யானைத்தாக்கி மகனை இழந்த சிறுவனின் பெற்றோர் போகாகத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரினை ஏற்றுக்கொண்ட போலீசார், சிறுவனைத் தாக்கியதாக கூறப்படும் தாய் யானை மற்றும் அதன் குட்டி யானையினை அதன் உரிமையாளருடன் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்ததோடு சங்கிலியில் கட்டி வைத்திருந்தனர். மேலும்  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாய் யானை மற்றும் குட்டி யானை 14 வயது சிறுவனைக்கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யானையினை விசாரணைக்குப்பிறகு, போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

அசாமில் சிறுவனைத்தாக்கி கொலை செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், தாய் யானை மற்றும் அதன் குட்டி யானை காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டது பெரும் வாதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தற்பொழுது அனைவரும் கருத்துக்களை பகிரும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. வனவிலங்குகள் அருகில் சென்றது அப்பையனின் தவறு எனவும், கைது செய்ய வேண்டியது யானைகளை அல்ல அதன் உரிமையாளர்கள் தான் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, அனைவருக்கும் பொதுவான விஷயம் தான், ஆனால் வாய் இல்லா இந்த ஜீவன்களை விசாரணைக்காக அழைத்து வந்ததோடு மட்டுமில்லாமல், விசாரணை முடியும் வரை சங்கிலியால் கட்டி வைத்து குற்றம் என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget