மேலும் அறிய

வரலாற்றில் முதல்முறை! 2 மாதத்தில் 2ஆவது முதலமைச்சர் கைது.. சோரனை தொடர்ந்து கெஜ்ரிவாலை தூக்கிய ED!

கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் என கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களை தட்டி தூக்கும் ED: 

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த சில மாதங்களாகவே, அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்தது. இப்படிப்பட்ட சூழலில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, தனது முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிய நிலையில், சோரன் கைது செய்யப்பட்டார்.  

ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகல், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவரை தவிர, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறை:

தேர்தல் நெருங்கும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கும் நோக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சியில் மட்டும் நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலை தவிர, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில்  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2014லிருந்து 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 121 முக்கிய அரசியல் தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களில் 115  பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சிலருக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக கடந்த 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

இதையும் படிக்க: Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. தேசிய அரசியலில் பரபரப்பு!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Embed widget