மேலும் அறிய

இறந்ததாக மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட உடல்.. ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?

சரியாக, ஏழு மணிநேரத்திற்கு பிறகு ஸ்ரீகேஷ் குமாரின் மைத்துனர் மதுபாலா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் 40 வயதான ஸ்ரீகேஷ் குமார் என்பவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இவர் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்,  ஸ்ரீகேஷ் குமாரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீகேஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவருக்கு இதயத் துடிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து,விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீகேஷ் குமாரின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஸ்ரீகேஷ் குமாரின் உடலானது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைத்துள்ளனர். 

சரியாக, ஏழு மணிநேரத்திற்கு பிறகு ஸ்ரீகேஷ் குமாரின் மைத்துனர் மதுபாலா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகேஷ் குமார் உடல் அசைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, ஸ்ரீகேஷ் குமார் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீகேஷ் குமார் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுவதே எங்கள் முதல் வேலை என்று தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர், ஸ்ரீகுமார் இறப்பதற்கு முன்பே, அவரை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கிட்டத்தட்ட கொலை செய்ய பார்த்துவிட்டார்கள். மருத்துவமனையில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் தெரிவிக்கையில், அதிகாலை 3 மணியளவில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீகேஷ் குமார் உடலை பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. தொடர்ந்து நடத்திய பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகே அவர் இறந்ததாக தெரிவித்தோம். காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உலகத்தில் எப்பொழுதாவது நடக்கும் அரிதான நிகழ்வு. இதை எப்படி அலட்சியம் என்று தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget