மேலும் அறிய

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டிலுள்ள அணைகளை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. அணை பாதுகாப்புக்காக தேசியக் குழு அமைக்கப்படும் என்பது தான் இந்த சட்டத்தின் அதி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இந்தச் சட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அணை பாதுகாப்புச் சட்டம் 2019, மட்டுமே முல்லை பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு என்று ஜல சக்தி துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்தின் உறுப்பினருமான பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.


முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

அவருடைய பேட்டியில் இருந்து:

இந்தச் சட்டம் மாநில உரிமைகளில் அத்துமீறுவதாகக் கூறப்படுகிறதே.. நீங்கள் நினைப்பது என்ன?

இந்த சட்டம் மூலம் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய குழு அமைய வழிவகை செய்யும். அதேபோல், தேசிய அணை பாதுகாப்பு முகமை அமையும். இவற்றில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இதனால், ஒருங்கிணைந்த அணைப் பாதுகாப்புக் கொள்கைகள் உருவாகும். அதன் மூலம் அணைகள் தொடர்பான பிரச்சனைக்கு நாடு தழுவிய தீர்வுகளை எட்ட முடியும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையமானது ஒரு ஒழுங்குமுறை ஆணையம் போல் செயல்படும்.

அது மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வழிவகை செய்யும். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து பொதுவான பிரச்சினைகளுக்கு ஒரே மாதிரியான தீர்வு எட்டப்பட உதவும். அதேவேளையில் மாநிலங்களில் தனிப்பட்ட கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாநில அணைப் பாதுகாப்பு குழுவின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.

ஒவ்வொரு மாநில அணைப் பாதுகாப்புக் குழுவிலும் அணையுடன் சம்பந்தப்பட்ட நீர் தேங்குமிடம், நீர் சென்றடையும் இடம் என இரண்டு மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார். இதனால் சுமுக தீர்வு எட்டப்படும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா?

ஆண்டாண்டு காலமான நடைபெறும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு 2019 அணைப் பாதுகாப்புச் சட்டம் மட்டுமே சிறந்த தீர்வு பெற்றுத் தரும். அணைப் பாதுகாப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தமிழகம், கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு நடுநிலை அமைப்பாக இயங்கும். இதனால் அணைப் பாதுகாப்பில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget