மேலும் அறிய

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டிலுள்ள அணைகளை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. அணை பாதுகாப்புக்காக தேசியக் குழு அமைக்கப்படும் என்பது தான் இந்த சட்டத்தின் அதி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இந்தச் சட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அணை பாதுகாப்புச் சட்டம் 2019, மட்டுமே முல்லை பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு என்று ஜல சக்தி துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்தின் உறுப்பினருமான பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.


முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

அவருடைய பேட்டியில் இருந்து:

இந்தச் சட்டம் மாநில உரிமைகளில் அத்துமீறுவதாகக் கூறப்படுகிறதே.. நீங்கள் நினைப்பது என்ன?

இந்த சட்டம் மூலம் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய குழு அமைய வழிவகை செய்யும். அதேபோல், தேசிய அணை பாதுகாப்பு முகமை அமையும். இவற்றில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இதனால், ஒருங்கிணைந்த அணைப் பாதுகாப்புக் கொள்கைகள் உருவாகும். அதன் மூலம் அணைகள் தொடர்பான பிரச்சனைக்கு நாடு தழுவிய தீர்வுகளை எட்ட முடியும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையமானது ஒரு ஒழுங்குமுறை ஆணையம் போல் செயல்படும்.

அது மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வழிவகை செய்யும். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து பொதுவான பிரச்சினைகளுக்கு ஒரே மாதிரியான தீர்வு எட்டப்பட உதவும். அதேவேளையில் மாநிலங்களில் தனிப்பட்ட கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாநில அணைப் பாதுகாப்பு குழுவின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.

ஒவ்வொரு மாநில அணைப் பாதுகாப்புக் குழுவிலும் அணையுடன் சம்பந்தப்பட்ட நீர் தேங்குமிடம், நீர் சென்றடையும் இடம் என இரண்டு மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார். இதனால் சுமுக தீர்வு எட்டப்படும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா?

ஆண்டாண்டு காலமான நடைபெறும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு 2019 அணைப் பாதுகாப்புச் சட்டம் மட்டுமே சிறந்த தீர்வு பெற்றுத் தரும். அணைப் பாதுகாப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தமிழகம், கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு நடுநிலை அமைப்பாக இயங்கும். இதனால் அணைப் பாதுகாப்பில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget