மேலும் அறிய

தாராவி மாடல் | கொரோனா இரண்டாம் அலையில் தப்பித்த மும்பை தமிழர்கள்

குடிசை வீடுகள் அதிகம்கொண்ட தாராவியில், இரண்டாம் அலையிலும் தொற்றுப்பரவல் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது, ஆறுதல் அளிக்கிறது.

கொரோனா முதல் அலையின்போது அதிக பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் இருந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் தொற்று அதிகமாகப் பரவி பாதிப்பை உண்டாக்கியது. ஆனால் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட ’கட்டுப்பாட்டு வழிமுறை’யால் மளமளவென பாதிப்பு குறைந்து, தொற்றே இல்லாத நிலையும் ஏற்பட்டது.
 
தாராவி மாடல் | கொரோனா இரண்டாம் அலையில் தப்பித்த மும்பை தமிழர்கள்
மும்பை

 

இரண்டரை சதுர கிமீ பரப்பில் விரிந்திருக்கும் தாராவி பகுதியில், குடியிருப்புகள் மிகவும் நெருக்கமாக அடுத்தடுத்து அமைந்திருப்பதைப் பற்றி விளக்க வேண்டியது இல்லை. கொரோனாவுக்கான முக்கிய தடுப்புவழியே தனி மனித இடைவெளிதான் எனும்போது, இந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டால் என்ன ஆகும் என பெரும் பீதி ஏற்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே தாராவியில் முதல் அலையின்போது தொற்று ஏற்பட்டு, மிக பரவல் வேகமெடுத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த மாதம் 26ஆம் தேதிவரை இந்தப் பகுதியில் கொரோனா தொற்றியதால் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதாவது இரண்டாவது அலைக் காலம் தொடங்கிய பின்னர் இறந்தவர்கள் 42 பேர்.
 

தாராவி மாடல் | கொரோனா இரண்டாம் அலையில் தப்பித்த மும்பை தமிழர்கள்

 
கடந்த பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருந்தது. அந்த மாதத்தின் பாதிவாக்கில்தான் தாராவி பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஆரம்பமானது. அடுத்து மார்ச்சில் கணிசமான அளவுக்கு மேலும் அதிகரித்த தொற்று, சென்ற மாதம் உச்சத்தைத் தொட்டது. தாராவியின் அதிகபட்ச அன்றாடத் தொற்றின் அளவு ஏப்ரல் 8ஆம் தேதி பதிவானது. அதுவே நூறுக்கும் கீழ் 99 எனும் அளவில்தான் இருந்தது.
 
அதன் பிறகு அங்கு தொற்று குறையத் தொடங்கியது. படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்று, கடந்த புதனன்று 3 ஆகவும் மறுநாளில் 4 ஆகவும் பதிவானது. இதே நேரம், மும்பை மாநகரில் அன்றாடத் தொற்றின் அளவு இன்னும் நான்கு இலக்கத்திலேயே நீடித்துவருகிறது. தாராவியில் இப்போதைக்கு 50 பேர்தான் கொரோனா பாதிப்பில் இருக்கின்றனர். (அதாவது, தொற்று ஏற்பட்ட 6,802 பேரில் 6,398 பேர் குணமடைந்துவிட்டனர்.) இதேவேளை, தாராவிக்கு அருகில் இருக்கும் தாதர் பகுதியில் 204 பேர், மாகிம் பகுதியில் 254 பேர் பாதிப்பில் இருக்கின்றனர்.
 
தாராவி மாடல் | கொரோனா இரண்டாம் அலையில் தப்பித்த மும்பை தமிழர்கள்
 
இரண்டாம் அலையில் தாராவியில் தொற்று உச்சநிலைக்குச் சென்று மிகவிரைவில் குறைந்ததற்குக் காரணம், ’தாராவி மாடல்’ வழிமுறைதான் என்கின்றனர், மும்பை மாநகராட்சி சுகாதாரத் துறையினர். இந்த வழிமுறையை உலக சுகாதார நிறுவனமே முந்தைய அலையின்போது பாராட்டியது நினைவிருக்கலாம்.
கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் தொற்று மெதுவாகப் பரவியது. உஷாரான மாநகராட்சி சுகாதாரத் துறையினர், முதல் அலையில் கையாண்டதைப்போல, சோதனையையும் முதல்நிலைத் தொடர்புகளை அறிவதிலும் ஈடுபட்டனர். ”இப்படி தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்ததால்தான், இந்த முறையும் கணிசமாக பாதிப்பு குறைக்கப்பட்டது” என்கிறார், மும்பை வடக்கு-ஜி பகுதி மாநகராட்சி உதவி ஆணையர் திகாவ்கர்.
எப்படியோ, குடிசைவீடுகளை அதிகம்கொண்ட தாராவியில், இரண்டாம் அலையிலும் தொற்றுப்பரவல் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது, ஆறுதல் அளிக்கிறது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Embed widget