மேலும் அறிய

ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை.. பிஎஃப்ஐ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் மூவரின் பெயரும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆவணம் திங்கள் கிழமை அதாவது நவம்பர் 21 ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைலேந்திர மாலிக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் பர்வேஸ் அகமது, முகமது இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரை குற்றவாளி என அறிவித்துள்ளது. 

இதில் அகமது டெல்லி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். முகமது இலியாஸ் பொதுச் செயலாளராகவும் அப்துல் முக்கீத் அலுவலகச் செயலாளராக இருந்தவர்களாவார்.

 கடந்த செப்டம்பர் 22 முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு , அமலாக்க இயக்குநரகம் மற்றும் மாநில காவல்துறை ஆகியவை தீவிர சோதனை நடத்தினர். 

முதற்கட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட சோதனையில், PFI ஐச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏக்கு இந்த அமைப்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அமைப்பு மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. 

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்தது.

சிஏஏ சட்டத்திற்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் PFI அமைப்பு செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற விவகாரங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும் இந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத  குழுக்குழுடன் தொடர்பு உள்ளதற்கான பல சம்பவங்கள் நிகழ்ந்த உள்ளதாகவும் மத்திய அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா போன்ற அமைப்புகளும்  5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
Embed widget