மேலும் அறிய

தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இரட்டை சம்பளம், கிராஜுவிட்டி விதியில் சூப்பர் மாற்றம்!

தற்போது அமலில் இருக்கும் தொழிலாளர் நல சட்டங்கள் நம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இயற்றப்பட்டவையாகும். அதனை தற்போதைய காலத்தில் செயல்படுத்துவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

தொழிலாளர் நலன்களை காக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக 4 தொழிலாளர் சட்ட விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் தொடங்கி ஐடி துறை வரை பல வகையாக பிரிவுகள் இயங்கி வருகின்றது. கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவுக்கு என பொதுவான தொழிலாளர் நல சட்டங்கள் இருந்தாலும், மாநில அரசும் தங்கள் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான விதிகளை கொண்டிருக்கிறது. வளர்ச்சி ஒருபுறம்  இருந்தாலும், பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புதிதாக வந்த 4 சட்டங்கள் 

இந்த நிலையில் பல்வேறு துறை சார்ந்து வேலை செய்யும்  பணியாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு 4 சட்ட விதிகளை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி 2019 தொழிலாளர் ஊதியச் சட்டம், 2020 தொழில்துறை தொடர்புகள், 2020 சமூக பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம், 2020 பணியிடச் சூழல் சட்டம் ஆகியவை அந்த சட்ட தொகுப்புகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அமலில் இருக்கும் தொழிலாளர் நல சட்டங்கள் நம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இயற்றப்பட்டவையாகும். அதனை தற்போதைய காலத்தில் செயல்படுத்துவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அதனை காலத்திற்கேற்ப மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் அமலில் இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை 4 பிரிவுகளின் கீழ் ஒருங்கிணைத்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களுக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் சம மரியாதை கிடைக்கும்.

ஒரு வருட வேலைக்குப் பிறகு நிலையான கால ஊழியர்களுக்கு பணிக்கொடை கிடைக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருடாந்திர இலவச சுகாதாரப் பரிசோதனை செய்யலாம். கூடுதல் நேரம் வேலை பார்த்தால் இரட்டை ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அபாயகரமான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு உண்டாகும். இந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஒரு சுயசார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும், மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ள்ளார். 

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget